அம்பானி, அதானி போல் கோடீஸ்வரர் ஆகும் யோகம் கொண்ட ராசிக்காரர்கள்
பொருளாதாரத்தையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தவே அனைவரும் உழைக்கின்றனர். ஆனால், எல்லாரும் கோடீஸ்வரர் ஆவதில்லை. சிலருக்கு மட்டுமே அந்த யோகம் உண்டு. ஜாதகப்படி சில ராசிகளுக்கு பிறப்பிலேயே கோடீஸ்வர யோகம் அமைந்திருக்கிறது.

ரிஷபம்:
ரிஷப ராசியின் அதிபதி ஆடம்பரத்தின் காரகனான சுக்கிரன் ஆவார். அம்பானி மற்றும் அதானி ஆகிய இருவருமே சுக்கிரனின் பலம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் இயல்பாகவே பணத்தை நிர்வகிக்கும் திறனும், தொலைநோக்கு பார்வையும் இருக்கும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாட்டை மேற்கொள்வதுடன், வைர மோதிரம் அல்லது ஸ்படிக மாலை அணிவது இவர்களின் செல்வ வளத்தை பல மடங்கு பெருக்கும்.
கன்னி:
வியாபாரக் காரகனான புதனின் ஆதிக்கம் பெற்ற கன்னி ராசிக்காரர்கள், கணக்கு வழக்குகளிலும் திட்டமிடுதலிலும் மிகச் சிறந்தவர்கள். எங்கு முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்ற ரகசியம் இவர்களுக்கு அசாத்தியமாகத் தெரியும். புதிய தொழில் முதலீடுகளைப் புதன்கிழமைகளில் தொடங்குவதும், மரகதப் பச்சை நிறப் பொருட்களைப் பயன்படுத்துவதும் குபேர யோகத்தை விரைவுபடுத்தும்.
விருச்சிகம்:
செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட விருச்சிக ராசிக்காரர்கள், வெளியில் தெரியாமல் ரகசியமாகப் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் வல்லவர்கள். எவ்வித ரிஸ்க்கான தொழிலையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, அதில் லாபம் ஈட்டும் வல்லமை இவர்களுக்கு உண்டு. செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அல்லது பைரவர் வழிபாடு செய்வதும், செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அருந்துவதும் இவர்களின் பொருளாதாரத் தடைகளை நீக்கும்.
மகரம்:
மறைந்த புகழ்பெற்ற தொழிலதிபர்கள் பலரின் ராசி மகரமாக இருந்துள்ளது. சனியின் ஆதிக்கம் கொண்ட இவர்கள், ஆரம்ப காலத்தில் தடைகளைச் சந்தித்தாலும், நடுத்தர வயதிற்குப் பின் அசைக்க முடியாத கோடீஸ்வரர்களாக மாறுவார்கள். சனிக்கிழமைகளில் இல்லாதப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும், இரும்பு சார்ந்த தொழில்களில் முதலீடு செய்வதும் இவர்களைத் தொழிலதிபராக மாற்றும்.
சிம்மம்:
சூரியனின் ஆதிக்கம் பெற்ற சிம்ம ராசிக்காரர்கள் எப்போதுமே அடுத்தவர்களிடம் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். இவர்களின் ராஜ யோகமும், ஆளுமைத் திறனும் இவர்களை ஒரு நிறுவனத்தின் தலைவராகவோ அல்லது பிரம்மாண்ட தொழிலதிபராகவோ மாற்றும். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதும், மாதுளம்பழச் சாற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவதும் இவர்களின் அதிர்ஷ்டக் கதவுகளைத் திறக்கும்.

