- Home
- Astrology
- திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் யமன்.! 3 ராசிகள் ஜாதகமே அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகும் யமன்.! 3 ராசிகள் ஜாதகமே அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Yama Peyarchi in Thiruvonam Nakshatra : இன்று (மார்ச் 3) யமன் திருவோணம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதனால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Yama Peyarchi in Thiruvonam Nakshatra
வேத ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், யமன் (புளூட்டோ) கிரகம் நவகிரகங்களில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும், நவீன ஜோதிட நம்பிக்கைகளின்படி யமனின் பெயர்ச்சி முக்கியமாகக் கருதப்படுகிறது. பொதுவாக புளூட்டோ அல்லது யம கிரகம் ஊழல், மோசடி, மர்மம், அழிவு மற்றும் பாவங்களின் காரணியாகக் கருதப்படுகிறது. இது ஒரு ராசியில் சுமார் 17 முதல் 18 ஆண்டுகள் வரை தங்கியிருக்கும்.
தற்போது, மார்ச் 3, 2026 அன்று மதியம் 2:16 மணிக்கு யம கிரகம் திருவோணம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறது. இந்த நிலை ஜூலை 13 வரை நீடிக்க இருக்கிறது. இந்த நட்சத்திர மாற்றத்தினால் பின்வரும் மூன்று ராசிக்காரர்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதவில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
யம கிரகம் திருவோணம் நட்சத்திரத்தில் நுழைந்து உங்கள் ராசிக்கு 9-ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் அமைகிறது. இதன் காரணமாக உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பொருளாதார நிலை வலுவடையும். நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.
கடகம்
யம கிரகம் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் அமர்கிறார். இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் இருந்த கசப்புகள் நீங்கி, தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் பல துறைகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரக் கூட்டாளிகளுடன் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. திருமணம் மற்றும் சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். எடுக்கும் துறைகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கு யம கிரகம் 5-ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக குழந்தைகளால் இருந்து வந்த மனக்கவலைகள் மற்றும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மன அழுத்தம் குறைந்து நிம்மதி ஏற்படும். கல்வித் துறையில் இருந்த தடைகள் விலகும். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

