Birth Date : இந்த 4 தேதில பிறந்தா ரொம்ப அதிர்ஷ்டம்!! காந்தம் மாதிரி ஈர்ப்பாங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எளிதில் பிறரை ஈர்க்கும் காந்த சக்தி கொண்டவர்கள். அந்த தேதிகளின் பட்டியல் இதோ..

Magnetic Birth Dates
எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை, வாழ்க்கை பாதை மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சொல்லி விடலாம். அந்த வகையில், சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பிறரை ஈர்க்கும் காந்த சக்தி உடையவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருக்கும். அவர்களை சுற்றி எப்போதுமே நண்பர்கள் இருப்பார்கள் என்று என் கணித நிபுணர்கள் சொல்லுகின்றனர். எனவே எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் காந்த தன்மை உடையவர்கள் என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் 3
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் என் 3ம் தேதி பிறந்தவர்கள் பிறரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். இவர்கள் சுய வெளிப்பாட்டுத்திறன் உடையவர்களாகவும், விளையாட்டுத் தன்மையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் வேடிக்கையை விரும்பும், திறந்த மனப்பான்மை பலரை ஈர்க்கும். இவர்களின் வார்த்தைகளின் சக்தி மற்றவர்களை வெல்லும்.
எண் 6
எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 6ம் தேதியில் பிறந்தவர்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் குடும்பம் மகிழ்ச்சியின் காரணமாக அங்கீகரிக்கப்படுவார்கள். இவர்கள் சமூகம் குடும்பம் மற்றும் மற்றவர்கள் ஒன்று கூடுவதற்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பாதுகாப்பான இடத்தை வளர்க்க ஆர்வமாக இருப்பார்கள். இவர்களின் இனிமையான மற்றும் இரக்கமுள்ள குணத்தால் பிறரால் ஈர்க்கப்படுவார்கள்.
எண் 21
எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் 21ஆம் தேதியில் பிறந்தவர்கள் ரொம்பவே நேசமானவர்கள் மற்றும் பிறருடன் எளிதில் பழகக் கூடியவர்கள். மேலும் இவர்கள் சிந்தனை மிக்கவர்கள் உணர்ச்சி ரீதியாக புத்திசாலி மற்றும் விளையாட்டுத்தனமானவர்கள். இவர்களின் துடிப்பான தன்மை, நகைச்சுவையான பேச்சு காரணமாக பிறரை எளிதில் ஈர்த்து விடுவார்கள். மேலும் இவர்கள் பலரது மரியாதையும் பாராட்டையும் பெறுவார்கள்.
எண் 24
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 24 ஆம் தேதியில் பிறந்தவர்கள் கவனமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் குரங்கு சார்ந்த மனநிலை மற்றவர்களை பற்றிய விஷயங்களை நினைவுபடுத்த உதவுகிறது. இவர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது அன்புக்குரியவர்களுக்காக தேவையான நேரத்தில் உதவுவார்கள். கடினமான காலத்திலும் நிலைத்தன்மையை கொண்டு வருவதற்கான வழியை கண்டுபிடிப்பார்கள்.