- Home
- Astrology
- 5 ராசிகளுக்கு சுக்கிர திசை.! கதவை தட்டும் அதிர்ஷ்டம்.! பொன், பொருள், புகழ் உங்களுக்குதான்.!
5 ராசிகளுக்கு சுக்கிர திசை.! கதவை தட்டும் அதிர்ஷ்டம்.! பொன், பொருள், புகழ் உங்களுக்குதான்.!
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் சுப கிரகமாக கருதப்படுகிறது. இந்த கிரகத்தின் செல்வாக்கினால்தான் ஒருவருக்கு வாழ்க்கையில் சுகபோகங்களும், செல்வமும் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 20 இல் தேதி சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

பணத்தட்டுப்பாடு இருக்காது
சுக்கிரன் ராசிபலன் ஆகஸ்ட் 2025: வேத ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 9 கிரகங்களில் சுக்கிரனும் ஒன்று. இந்த கிரகம் நம் வாழ்வில் மிகுந்த செல்வாக்கு செலுத்துகிறது. யாருடைய ஜாதகத்தில் இந்த கிரகம் சிறப்பான நிலையில் இருக்கிறதோ, அவர்களுக்கு வாழ்வில் பணத்தட்டுப்பாடு இருக்காது. இந்த கிரகம் ஒரு ராசியில் 23 அல்லது 26 நாட்கள் இருக்கும். ஆகஸ்ட் 20, 2025 அன்று சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த 5 ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்வோம்…
மேஷம்
இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் நல்ல பணவரவு கிடைக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தம் கூட சாத்தியமாகும். உடல்நலப் பிரச்சினை ஏதேனும் இருந்தால் அதுவும் நீங்கும். காதல் உறவுகள் திருமணத்தில் முடியும். காதல் வாழ்க்கை முன்பை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
இந்த ராசியில்தான் சுக்கிரன் நுழைகிறார், இதனால் இவர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். எல்லா விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்கலாம். வங்கி இருப்பில் திடீர் அதிகரிப்பு ஏற்படலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்ளலாம். குடும்பத்தில் சந்தோஷமும், அமைதியும் நிலவும்.
சிம்மம்
இந்த ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் சுப பலன்கள் கிடைக்கும். வேலையில் கொடுக்கப்பட்ட இலக்குகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். கணவன்-மனைவி உறவில் இனிமை நிலவும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். கடன் கொடுத்த பணமும் திரும்பக் கிடைக்கும். கூட்டுத் தொழில்களில் லாபம் கிடைக்கும்.
துலாம்
இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணம் தொடர்பான ஏதேனும் கவலைகள் இருந்தால் அவை நீங்கும். புதிய காதல் உறவுகள் ஏற்படும், அவை எதிர்காலத்தில் திருமணத்தில் முடியும். நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதிலும் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கும் இந்த காலம் சிறப்பாக இருக்கும்.
குப்பம்
இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் சொத்துக்கள் தொடர்பான லாபம் கிடைக்கலாம். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கலாம், இதனால் உங்கள் கடனை அடைக்க முடியும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உயர் பதவி கிடைக்கலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.