MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • பணம் 2 மடங்கு பெருக.. வாஸ்துபடி இந்த '1' விஷயத்தை பண்ணுங்க!

பணம் 2 மடங்கு பெருக.. வாஸ்துபடி இந்த '1' விஷயத்தை பண்ணுங்க!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும், உங்களுக்கு பணப் பற்றாக்குறை வரவே வராது.

2 Min read
Kalai Selvi
Published : Mar 10 2025, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Vastu Tips For Money With Tulsi Parikrama : சொந்த வீடு ஒன்று வேண்டும் என்பது அனைவரது கனவு. இதற்காக ஒரு நபர் தனது வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை சேமிக்கிறார். வாஸ்து சாஸ்திரத்தில் வீடு தொடர்பான சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் ரொம்வே முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்துபடி, செய்யும் காரியங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலைத்து இருக்கும். மேலும் வாழ்க்கையில் முன்னேற்றமும் ஏற்படும். வாஸ்து படி, வீட்டின் பிரதான வாயில் அல்லது பிரதான கதவு ரொம்பவே முக்கியமான இடமாகும். மேலும் பிரதான கதவானது வாஸ்து படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாழ்க்கை மற்றும் வீடுகளில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு வர வாஸ்து குறிப்புகளை பின்பற்ற வேண்டும். எனவே, இந்த பதிவில் பணம் இரண்டு மடங்கு அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்தால் போதும்.

24
பணம் அதிகரிக்க வாஸ்து தீர்வு:

பணம் அதிகரிக்க வாஸ்து தீர்வு:

இந்து மதத்தில் துளசி செடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வீட்டில் துளசி செடி வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. துளசி செடி பல உடல்நல பிரச்சினைகளை போக்கும். வாஸ்துபடி, துளசி செடியின் வேரை வீட்டின் பிரதான வாசலில் கட்டினால் செல்வம் பெருகும். இதுதவிர, செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும். மேலும், இந்த தீர்வானது பணம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்கும்.

இதையும் படிங்க:  Tulsi Astrology remedy: தீராத கடன் தீர, பணம் சேர, சக்தி வாய்ந்த பரிகாரம்: உடனே செய்யவும்!!

34
எப்படி கட்ட வேண்டும்?

எப்படி கட்ட வேண்டும்?

பிரதான நுழைவாயிலில் துளசி செடியின் வேரை கட்டுவதற்கு என சில வாஸ்து விதிகள் உள்ளன. எனவே, வாஸ்து படி, துளசி செடியின் வேர் காய்ந்த பிறகு அதை அகற்றிவிடுங்கள். இப்போது துளசி வேர் மற்றும் அரிசியை ஒரு சிவப்பு துணியில் கட்டி அதை உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயில் கட்டுங்கள்.

இதையும் படிங்க:  துளசி செடிக்கு இவ்வளவு பவரா? அள்ள அள்ள குறையாத பணம்..

44
துளசி தொடர்பான சில விதிகள்:

துளசி தொடர்பான சில விதிகள்:

வீட்டில் துளசி செடி வைப்பது மிகவும் மங்களகரமாகும். இதை வீட்டில் வைப்பது எதிர்மறை ஆற்றல் நீங்கும். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் தான் நட வேண்டும். துளசி இலைகளை ஒருபோதும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பறிக்க வேண்டாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
வாஸ்து குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved