- Home
- Astrology
- Oct 31 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று சில்லறை பிரச்சனைகள் சுத்தி சுத்தி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Oct 31 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று சில்லறை பிரச்சனைகள் சுத்தி சுத்தி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Today Rasi Palan : அக்டோபர் 31, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 31, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் சில சில்லறைப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இருப்பினும் உங்களுடைய திறமையால் அவற்றை சமாளிப்பீர்கள். மனதில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால், மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே பொறுமை அவசியம். உங்கள் முயற்சிக்கு உரிய அங்கீகாரம் தாமதமாக கிடைக்கலாம். எனவே நிதானமாக இருங்கள்.
நிதி நிலைமை:
எதிர்பாராத செலவுகள் சில நிதி சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கவனமாக செலவிடுவது நல்லது. பணம் கைவசம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதம் ஏற்படலாம். பெற்றோர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலம் நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகரிக்கும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சிறு வருத்தங்கள் நீங்கி நல்லிணக்கம் கூடும். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம். எனவே மூன்றாம் நபர்களின் தலையீடுகளை தவிர்த்து விடுங்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பரிகாரங்கள்:
இன்று ரேணுகா பரமேஸ்வரி அல்லது காமாட்சி அம்மனை வழிபடுவது நன்மை தரும். அஷ்ட லட்சுமியை வழங்குவது நிதின் நிலைமை மேம்படுத்தும். நரசிம்மர் வழிபாடு பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். ஏழை எளியவர்களுக்கு உதவுவது நற்பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

