- Home
- Astrology
- Maha shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் ஈசனின் அருள்பெறப் போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்.! உங்க ராசி இருக்கா?
Maha shivratri 2026: மகா சிவராத்திரி நாளில் ஈசனின் அருள்பெறப் போகும் அந்த 3 அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்.! உங்க ராசி இருக்கா?
Maha Shivratri 2026 Rasi Palan: ஜோதிடப்படி, மகாசிவராத்திரி சில ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானது. குறிப்பாக 3 ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக பெரும் வெற்றியைப் பெறுவார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மகா சிவராத்திரி 2026
பங்குனி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 15 மாலை 5.04க்கு சிவராத்திரி தொடங்கி, பிப்ரவரி 16 மாலை 5.34க்கு முடிகிறது. இந்த முறை மகா சிவராத்திரியில் பல சுப யோகங்கள் உருவாகின்றன. அன்றைய தினம் செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் 'மகாலட்சுமி ராஜயோகம்' உருவாகிறது. இந்த யோகம், சிவபெருமானின் அருளோடு சேர்ந்து குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி மிகவும் சிறப்பானது. இந்த ராசியினர் சிவனின் சிறப்பு ஆசிகளைப் பெறுவார்கள். நிதி சிக்கல்கள் நீங்கும். நீண்டகாலமாக உழைத்துவந்த இலக்குகளை அடைவார்கள். மேஷ ராசிக்கு இந்த சிவராத்திரி ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக அமையும். உங்கள் ராசியின் 10-வது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாவதால், தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளில் இதுவரை இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வந்து சேரும்.சிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது இரட்டிப்பு பலனைத் தரும்.
கன்னி
கன்னி ராசியினரின் வாழ்வில் மகாசிவராத்திரி மகிழ்ச்சியைத் தரும். கஷ்டங்கள் நீங்கும். வங்கி இருப்பு இரட்டிப்பாகும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் உள்ளன. தன்னம்பிக்கை அதிகரித்து, வெற்றிப் பாதை திறக்கும். அரசு வழி காரியங்களில் வெற்றி கிட்டும். போட்டித் தேர்வுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு நல்ல செய்தி வரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு மகா சிவராத்திரிக்குப் பிறகு நல்ல முதலீடுகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். கோதுமை கலந்த நைவேத்தியம் படைத்து சிவனை வழிபடவும்.
கும்பம்
ஜோதிடப்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி மிகவும் சுபமான நாள். ஏழரை சனியின் தாக்கம் இருந்தாலும், சிவராத்திரி வழிபாடு உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும். சிவபெருமான் கும்ப ராசிக்கு விசேஷமான அருளை வழங்குவார். பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். செல்வம் குவிய வாய்ப்புள்ளது. துணையுடனான உறவு வலுப்பெறும். குடும்ப ஆதரவு கிடைக்கும். வேலையில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. இரவு நான்கு கால பூஜையிலும் கலந்துகொண்டு 'ஓம் நம சிவாய' மந்திரத்தை உச்சரிப்பது நல்லது.
சிவராத்திரி வழிபாட்டு முறைகள்
மகா சிவராத்திரி அன்று முழு பலனைப் பெற கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றலாம்:
- பிப்ரவரி 15 அதிகாலை முதல் விரதத்தைத் தொடங்கி, 16-ம் தேதி காலை விரதத்தை முடித்தல் வேண்டும்.
- இரவு முழுவதும் கண் விழித்து சிவபுராணம் வாசிப்பது அல்லது கேட்பது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.
- பஞ்சாமிர்தம், பால், நெய் மற்றும் தேன் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது சிறப்பு.
- சிவனுக்கு மிகவும் பிடித்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது கோடி புண்ணியத்தைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

