kanavu palan யாருடைய கனவில் இறந்தவர்கள் அடிக்கடி வருவார்கள் தெரியுமா?
வீட்டில் எத்தனையோ பேர் இருந்தாலும் அனைவருடைய கனவிலும் இறந்தவர்கள் வருவது கிடையாது. குறிப்பிட்ட சில நபர்களின் கனவுகளில் மட்டும் முன்னோர்கள் அடிக்கடி வருவார்கள். அப்படி யாருக்கெல்லாம் முன்னோர்கள் கனவில் அடிக்கடி வருவார்கள் என தெரிந்து கொள்ளலாம்.

ஆன்மாவின் தொடர்பு :
மறைந்த நம் முன்னோர்கள் அல்லது பிடித்தவர்கள் கனவில் வருவது வெறும் பிரம்மை அல்ல. அது ஒரு "ஆன்மீக அலைவரிசை". அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பு அடுத்த பிறவிகளிலும் தொடர போவதாக அர்த்தம்.
கிரகங்களின் பலவீனம்:
ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் ராகு, கேது, மற்றும் சந்திரன் பலவீனமாக இருக்கும் போது, அல்லது பித்ரு தோஷம் இருக்கும் போது இறந்தவர்கள் கனவில் அடிக்கடி வருவார்கள்.
எப்படி வருகிறார்கள்?
இறந்தவர்கள் கனவில் மகிழ்ச்சியாக வந்தால் உங்கள் குலதெய்வம் அல்லது முன்னோர்கள் உங்கள் மீது திருப்தியாக இருக்கிறார்கள், உங்களை ஆசிர்வதிக்கிறார்கள் என்று அர்த்தம்.
கோபமாக அல்லது பேசாமல் இருந்தால்?
அமைதியாக அல்லது கோபமாக இருந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி, திலதர்ப்பணம் அல்லது வேண்டுதல்களை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என்பதன் அறிகுறி இது!
ஆபத்துக்கான எச்சரிக்கை :
சில நேரங்களில், உங்களுக்கு வரப்போகும் ஏதோ ஒரு பெரிய ஆபத்தை முன்கூட்டியே எச்சரிக்கவே அவர்கள் கனவில் தோன்றி உங்களை உஷார்படுத்துகிறார்கள்.
செய்ய வேண்டிய எளிய பரிகாரம் :
கனவு வந்த அடுத்த நாள் காலை, குளித்துவிட்டு காகத்திற்கு சாதம் வையுங்கள். பசுமாட்டிற்கு அகத்திக் கீரை கொடுப்பது பித்ருக்களின் ஆன்மாவை சாந்தியடையச் செய்யும். அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வீட்டில் விளக்கேற்றி, அவர்களுக்குப் பிடித்த உணவை படையலிடுங்கள். கனவுகள் பாசிட்டிவாக மாறும்!

