- Home
- Astrology
- Astrology: சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரம்.! விரய சனியை லாப சனியாக மாற்றும் ஜோதிட ரகசியம்.!
Astrology: சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரம்.! விரய சனியை லாப சனியாக மாற்றும் ஜோதிட ரகசியம்.!
விரய சனி, வாழ்வில் தடைகளையும் தேவையற்ற செலவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால் சனிக்கிழமை வழிபாடு, தானம், ஆஞ்சநேயர் வழிபாடு போன்ற எளிய பரிகாரங்கள் மூலம் சனியின் தாக்கத்தை குறைத்து, விரயத்தை லாபமாக மாற்ற முடியும் என இக்கட்டுரை விளக்குகிறது.

சனி தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்.!
ஜோதிடத்தில் சனி கிரகம் மிகவும் முக்கியமானதும், அதே நேரத்தில் பயத்தை ஏற்படுத்தக்கூடியதுமான கிரகமாக கருதப்படுகிறது. சனி ஒருவரின் வாழ்க்கையில் தாமதம், தடைகள், விரயம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தினாலும், அது முழுக்க தீமையை மட்டும் தருவதில்லை. சரியான பரிகாரங்கள் செய்தால், அதே சனி பெரும் லாபங்களையும், நிலைத்த வெற்றியையும் தரும் சக்தி கொண்டது.
விரய சனி என்றால் என்ன?
ஜாதகத்தில் சனி 12-ஆம் இடத்தில் அல்லது விரய ஸ்தானத்தில் இருப்பது “விரய சனி” என்று அழைக்கப்படுகிறது. இதனால் தேவையற்ற செலவுகள், கடன் சுமை, மன உளைச்சல், முயற்சியில் தடை போன்ற பிரச்சினைகள் அதிகமாக காணப்படும். ஆனால் இதை சரியாக கையாள்ந்தால், இந்த விரயம் கூட முதலீடாக மாறி லாபமாக திரும்பும்.
சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரங்கள்
சனிக்கிழமை வழிபாடு
நீதிமானான சனி பகவான் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்கின்றன ஜோதிட நூல்கள். விரய சனிகாலத்தில் கூட நாம் செய்யும் எளிய பரிகாரங்கள் நம்மை பாதுகாக்கும் எனவும், எல்லாவற்றிலும் லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என்றும் ஜோதிட வல்லுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானை வழிபடுவது மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. எள் எண்ணெய் தீபம் ஏற்றி, “ஓம் சனீஸ்வராய நம:” என்று 108 முறை ஜபம் செய்ய வேண்டும் எனவும் அப்படி செய்தால் நம் ஜாதகத்தில் உள்ள ஜோஷங்கள் காணாமல் போகும் எனவும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
எள் மற்றும் கருப்பு பொருட்கள் தானம்
யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவானின் தாக்கம் குறைந்து அவருடைய அருள் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். அதிலும் கருப்பு எள், கருப்பு துணி, இரும்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் சனியின் தாக்கம் குறையும் என்கின்றனர் அவர்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு
சனி தோஷத்தை குறைக்க ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரம். குறிப்பாக சனிக்கிழமைகளில் “ஹனுமான் சாலிசா” பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் மற்ற நாட்களிலும் அருகேயுள்ள ஆஞ்சநேயர் ஆலயம் சென்று வழிபாடு நடத்தலாம். இது விரய சனியின் தாக்கத்தை போக்கி லாபத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.
உழைக்கும் மக்களுக்கு உதவி
சனி உழைப்பையும், தாழ்மையையும் குறிக்கிறது. ஆகவே கூலி தொழிலாளர்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்தால் சனி கருணை அதிகரிக்கும். அதேபோல் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல் போன்றவையும் நல்ல பலனை கொடுக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
நெறியான வாழ்க்கை முறை
பொய் பேசாமல், நேர்மையாக வாழ்வது சனியின் அருளைப் பெற முக்கியமானது. தவறான வழிகளில் சம்பாதித்த பணம் சனியின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல் நல்ல சிந்தனை மற்றும் தொடர் முயற்சி ஆகியவையும் நமக்கான ஆரோக்கிய வளர்ச்சியை தரும்.
விரய சனியை லாப சனியாக மாற்றுவது எப்படி?
விரய சனி உள்ளவர்கள் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்தால் மன அமைதி கிடைக்கும். சனி கொடுக்கும் கஷ்டங்கள் நம்மை சோதிப்பதற்காகவே; அதை தாண்டினால் பெரிய வெற்றி நிச்சயம்.
பயப்பட வேண்டியதில்லை
சனி தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை. அது நம்மை ஒழுக்கமாகவும், பொறுமையாகவும் மாற்றும் ஒரு வாழ்க்கை ஆசிரியர். சரியான பரிகாரங்களும், நல்ல செயல்களும் இருந்தால், விரய சனி கூட லாப சனியாக மாறி வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தை அளிக்கும்.

