- Home
- Astrology
- Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு 30 வயதிற்கு மேல் பணக்காரரராகும் யோகம் இருக்கிறதாம். அது எந்தெந்த தேதிகளில் என்று இங்கு பார்க்கலாம்.

Rich Birth Dates
எண் கணிதம் என்பது ஒரு நபர் பிறந்த தேதி, மாதத்தை வைத்து அவரது ஆளுமை, எதிர்காலம் உள்ளிட்ட பல விஷயங்களை சொல்லி விட முடியும். அதாவது ஒருவரது பிறந்த தேதி மற்றும் வாழ்க்கை பாதை எண்ணின் அடிப்படையில்தான் எண் கணிதம் செயல்படுகிறது. வாழ்க்கை பாதை எண் என்பது ஒருவர் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையில் இருந்து பெறப்படும் ஒற்றை எண் ஆகும். அந்தவகையில் எந்த வாழ்க்கை பாதை எண்ணிற்கு 30 வயதிற்கு மேல் பணக்காரரராகும் யோகம் இருக்கிறது என்று இங்கு பார்க்கலாம்.
வாழ்கை பாதை எண் 5 :
எண் கணிதத்தின் படி வாழ்க்கை பாதை எண் 5 -யை கொண்டவர்கள் மிகவும் சக்தி வாய்ந்த எண்களில் ஒன்றாக கருதப்படுகிறது புத்திசாலித்தனம் வசிகரம் ஆய்வு ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்கள்.
புதன் கிரகம் :
எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை புதன் கிரகம் ஆளுகிறது. இந்த கிரகமானது புத்திக்கூர்மை, நட்பு உறவு, வர்த்தகம் ஆகியவற்றின் அதிபதியாக இருக்கிறது. எனவே இதன் கீழ் இருப்பவர்கள் சரியாக திட்டமிடுபவர்கள் ஆகவும் புத்திசாலியாகவும் இருப்பார்களாம்.
அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு புதன் அவர்கள் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு செல்வத்தை வாரி வழங்குவாராம். மேலும் பொருளாதார தேடலில் இவர்களுக்கு தேவையான திறமையை புதன் வழங்குவார். அதுபோல வாழ்க்கை பதின் ஐந்தில் பிறந்தவர்கள் எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும் புதனின் அருளால் அவர்கள் 30 வயதிற்கு மேல் பணக்காரர் ஆகும் யோகம் கிடைக்குமாம்.
தேடலில் ஆர்வம் :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் புதிய சாகசங்கள், வாய்ப்புகளை தேட ஆர்வமாக இருப்பார்கள். புதிய புதிய யோசனைகளை நிறைவேற்றுவதிலும் வல்லவர்களாக இருப்பார்களாம். சிக்கல்களை சுலபமாக சமாளிக்க திறன் இவர்களுக்கு உண்டு. நினைத்ததை சாதித்து முடிப்பார்கள்.
அசைக்க முடியாத மன உறுதி :
இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஒரு லட்சியத்தை குறித்து விட்டால் அதை அர்ப்பணிப்புடன் பின் தொடர்ந்து செய்து முடிப்பார்கள். எப்பேர்ப்பட்ட சவால்கள் வந்தாலும் பின்னடைய மாட்டார்கள். தோல்வியை கண்டாலும் வெற்றியை அடைய பாடுபடுவார்கள்.

