- Home
- Astrology
- Astrology: பெத்த தாயாக இருந்தாலும் தப்புன்னா தட்டி கேட்கும் 3 ராசிக்காரர்கள்! உங்க ராசி இருக்கா?
Astrology: பெத்த தாயாக இருந்தாலும் தப்புன்னா தட்டி கேட்கும் 3 ராசிக்காரர்கள்! உங்க ராசி இருக்கா?
Astrology: ஜோதிட சாஸ்திரத்தின்படி உறவுகளை விட தர்மத்திற்கும் நீதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் 3 ராசிகள் உள்ளன. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த 3 ராசிகள் நீதிமான்கள்
ஜோதிட சாஸ்திரத்தின்படி 12 ராசிகளுக்கும் தனித்தனி குணாதிசயங்கள் உண்டு. அதில் சில ராசிக்காரர்கள் பாசத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், வேறு சிலரோ "பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், நியாயம் என்று வந்துவிட்டால் நான் பெற்ற தாயாக இருந்தாலும் தட்டி கேட்பேன்" என்று நேர்மையின் பக்கம் நிற்பார்கள்.
அந்த வகையில் உறவுகளுக்காக உண்மையை விட்டுக் கொடுக்காத, ஜோதிட ரீதியாக 'நீதிமான்கள்' என்று அழைக்கப்படும் முக்கிய 3 ராசிகள் குறித்து இந்த செய்தியில் பார்போம்.
துலாம் (Libra)
நீதி மற்றும் நேர்மைக்கு மிகச்சிறந்த உதாரணம் துலாம் ராசி. இந்த ராசியின் சின்னமே 'தராசு' தான். இவர்கள் எப்போதுமே இரண்டு பக்க நியாயங்களையும் சீர்தூக்கிப் பார்ப்பதில் வல்லவர்கள்.
தன் கண் முன்னே தவறு நடப்பதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. அது பெற்ற பெற்றோராக இருந்தாலும் சரி, பிள்ளையாக இருந்தாலும் சரி, "நீங்கள் செய்தது தவறு" என்பதை முகத்திற்கு நேராக நாசூக்காகவும் அதே சமயம் அழுத்தமாகவும் சுட்டிக்காட்டுவார்கள். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தர்மத்தின் பக்கம் நிற்பதையே இவர்கள் தங்களின் தார்மீக கடமையாகக் கருதுகிறார்கள்.
மகரம் ராசி (Capricorn)
மகர ராசியின் அதிபதி 'நீதி தேவன்' என்று அழைக்கப்படும் சனி பகவான் ஆவார். இதனால், இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே சட்ட திட்டங்களுக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் கட்டுப்பட்டு நடக்கும் குணம் அதிகம் இருக்கும்.
இவர்களிடம் எந்தவிதமான பாரபட்சமும் இருக்காது. தவறு என்று தெரிந்துவிட்டால், "அம்மா, அப்பா நீங்கள் இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டீர்கள், இதை மாற்றிக் கொள்ளுங்கள்" என்று கண்டிப்புடன் கூறுவார்கள்.
தவறை மறைப்பது இன்னும் பெரிய தப்பிற்கு வழிவகுக்கும் என்று நம்புவதால், குடும்பத்தினரின் கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை என்று உண்மையை உரக்கச் சொல்வார்கள்.
தனுசு (Sagittarius)
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். குருவின் ஆதிக்கம் நிறைந்த இந்த ராசிக்காரர்கள் நியாய தர்மங்களுக்கு அஞ்சாதவர்கள். எதற்கும் பயப்படாமல் உண்மையை பேசுவது இவர்களின் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று.
இவர்களிடம் இராஜதந்திரம் என்ற பெயரில் உண்மையை மறைக்கும் குணம் இருக்காது. பெற்றவர்கள் தவறு செய்யும்போது, இவர்களின் உள்மனசாட்சி அதை ஏற்கும் வரை அவர்களுக்காக வாதாட மாட்டார்கள். தப்பு யார் செய்தாலும் தப்புதான்" என்ற கொள்கை உடையவர்கள். இவர்களின் இந்த வெளிப்படையான பேச்சு சில நேரங்களில் குடும்பத்தில் விவாதங்களை ஏற்படுத்தினாலும், இறுதியில் இவர்களின் நேர்மையே வெல்லும்.
மேற்கண்ட இந்த ராசிக்காரர்கள் பெற்றோரை மதிக்காதவர்கள் அல்ல. பெற்றோர் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தாலும், அந்த அன்பை விட 'அறம்' பெரியது என்று வாழும் உன்னத குணம் கொண்டவர்கள். இதனால் தான் இவர்களை ஜோதிட உலகம் 'நீதிமான்கள்' என்று போற்றுகிறது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

