MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • விவசாயம்
  • Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!

தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் திருவண்ணாமலையில் மாபெரும் வேளாண் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சி புதிய தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள், மற்றும் நிபுணர் ஆலோசனைகளை ஒரே இடத்தில் வழங்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Dec 20 2025, 08:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
புதிய யோசனைகள், நவீன இயந்திரங்கள், சந்தை வாய்ப்புகள்
Image Credit : Asianet News

புதிய யோசனைகள், நவீன இயந்திரங்கள், சந்தை வாய்ப்புகள்

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு நேரடியாக நடத்தும் வேளாண் கண்காட்சிகள் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் சிறந்த மேடையாக அமைகின்றன. இத்தகைய கண்காட்சிகள் விவசாயம் சார்ந்த புதிய யோசனைகள், நவீன இயந்திரங்கள், அரசு மானியங்கள் மற்றும் வணிக தொடர்புகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக, விவசாயிகள் தங்களது உற்பத்திகளை நேரடியாக விற்கவும், தேவையான உள்ளீடுகளை வாங்கவும், நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

27
மிகப்பெரிய வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்
Image Credit : Asianet News

மிகப்பெரிய வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு, விவசாய உற்பத்தியை உயர்த்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும் தொடர்ந்து பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோயிலூர் தனியார் மைதானத்தில் மிகப்பெரிய வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 

Related Articles

Related image1
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Related image2
Business: சம்பளம் போதலையா? அரசு மானியத்துடன் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! எப்படி தெரியுமா?
37
நேரடியாக நிபுணர்களிடம் ஆலோசனை
Image Credit : Asianet News

நேரடியாக நிபுணர்களிடம் ஆலோசனை

இந்த வேளாண் கண்காட்சியில், நவீன விவசாய தொழில்நுட்பங்கள், புதிய விதை வகைகள், இயற்கை மற்றும் ஒருங்கிணைந்த வேளாண்மை முறைகள், நீர் மேலாண்மை, மண் வள மேம்பாடு, விவசாய இயந்திரங்கள், அரசு மானியத் திட்டங்கள், கடன் மற்றும் காப்பீட்டு திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும், தங்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காணவும் சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

47
 நேரடி விற்பனை, புதிய சந்தை வாய்ப்புகள்
Image Credit : Asianet News

நேரடி விற்பனை, புதிய சந்தை வாய்ப்புகள்

குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னணி ஏற்றுமதியாளர்கள், சிறப்பாக செயல்படும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் (FPO), உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகியோர் தங்களது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சி கூடங்களில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரடி விற்பனை, புதிய சந்தை வாய்ப்புகள் மற்றும் வணிக தொடர்புகள் உருவாகும் என்பதால், இது விவசாயிகளுக்கும் தொழில் முனைவோருக்கும் மிகப் பெரிய பயனளிக்கும்.

57
 தங்களது பொருட்களை விற்பனை செய்ய அரிய வாய்ப்பு
Image Credit : Asianet News

தங்களது பொருட்களை விற்பனை செய்ய அரிய வாய்ப்பு

கண்காட்சி கூடம் அமைக்க விரும்புவோர் https://www.tnagrisnet.tn.gov.in/agriExpo/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான கடைசி நாள் 22.12.2025 ஆகும். பதிவு செய்தவர்களுக்கு கண்காட்சி கூடங்களில் தங்களது பொருட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் அரிய வாய்ப்பு கிடைக்கும்.

67
விவசாயிகள் வழிகாட்டுதல்களை பெறலாம்
Image Credit : Asianet News

விவசாயிகள் வழிகாட்டுதல்களை பெறலாம்

விவசாயிகள் அனைவரும் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்புகொண்டு, கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை பெறலாம். அரசு நேரடியாக நடத்தும் இந்த வேளாண் கண்காட்சி, வாங்கவும், விற்கவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் உதவும் ஒரு முழுமையான தளமாக அமைவதால், விவசாயிகள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

77
நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்
Image Credit : Asianet News

நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்

தமிழ்நாடு அரசு விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு நேரடியாக நடத்தும் வேளாண் கண்காட்சிகள் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் சிறந்த மேடையாக அமைகின்றன. இத்தகைய கண்காட்சிகள் விவசாயம் சார்ந்த புதிய யோசனைகள், நவீன இயந்திரங்கள், அரசு மானியங்கள் மற்றும் வணிக தொடர்புகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்துகின்றன. குறிப்பாக, விவசாயிகள் தங்களது உற்பத்திகளை நேரடியாக விற்கவும், தேவையான உள்ளீடுகளை வாங்கவும், நிபுணர்களின் ஆலோசனைகளை பெறவும் இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
விவசாயம்
விவசாயக் கடன்
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
விவசாயக் கடன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Recommended image2
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!
Recommended image3
Agriculture: ஏக்கருக்கு ரூ.10 லட்சம் லாபம்.! சமவெளி, வறட்சி பகுதிகளிலும் செய்யலாம் அவக்கோடா சாகுபடி.! இது தெரியாம போச்சே.!
Related Stories
Recommended image1
Agri Export: வாழை விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! இனி நீங்களும் ஏற்றுமதியாளர் ஆகலாம்.! வழிகாட்டுகிறது தமிழக அரசு.!
Recommended image2
Business: சம்பளம் போதலையா? அரசு மானியத்துடன் மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம்.! எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved