Asianet News TamilAsianet News Tamil

உனக்கு வேலை தானே.. நான் தர்ரேன் வா... பேஸ்புக் தோழியை ஒட்டலுக்கு அழைத்து சென்று கதற கதற வன்புணர்வு.

பேஸ்புக்கில் வேலை வேண்டும் என கேட்ட இளம்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள  சம்பவம் நடந்துள்ளது ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில்  இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

 
 

You need a job..come with me...young man having sex with a Facebook friend
Author
Rajasthan, First Published Aug 17, 2022, 8:37 PM IST

பேஸ்புக்கில் வேலை வேண்டும் என கேட்ட இளம்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில்  இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆறு மாத குழந்தைகள் முதல் 60 வயது  மூதாட்டிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இந்த வரிசையில் வேலை தேடி உதவி கேட்ட பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று பாலியல் விழிப்புணர்வு செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது.

You need a job..come with me...young man having sex with a Facebook friend

இதையும் படியுங்கள்: ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்

முழு விவரம் பின்வருமாறு ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் நகரைச் சேர்ந்தவர் இளம்பெண் வாலிபர் ஒருவருடன் பேஸ்புக்கில் நண்பராக பழகி வந்தார். பின்னர் அவர்கள் இருவரும் மொபைல் எண்களை பகிர்ந்துகொண்டனர், தினம் அந்தப் பெண்ணுடன் அந்த வாலிபர் தொலைபேசியில் உரையாடினார், ஒரு நாள் இளம்பெண் தன் தந்தை இறந்து விட்டதாக அந்த வாலிபரிடம் கூறியதுடன்,தனது குடும்பத்தை தான்தான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்தார்.

இதையும் படியுங்கள்: வீட்டு வேலைக்காரியை நிர்வாணப்படுத்தி கட்டி வைத்து ஹவுஸ் ஓனர் செய்த அசிங்கம்... இளம்பெண் எடுத்த பயங்கர முடிவு

இதனையடுத்து ஆகஸ்ட் 10ஆம் தேதி தோல்பூர் நகரில் வேலை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச் சென்றார், பின்னர் அங்கு ஒரு ஹோட்டலுக்கு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றதுடன் அந்த அறையில் வைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த பெண் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் ஆனால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவேன் என அந்த இளைஞன் மிரட்டியதால் அந்த பெண் வேறுவழியின்றி அதற்கு உடன்பட்டார். பின்னர் அங்கிருந்து தப்பி அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

You need a job..come with me...young man having sex with a Facebook friend

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாவட்ட மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் குற்றவாலியை வலைவீசி தேடி வருகின்றனர். 
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios