Asianet News TamilAsianet News Tamil

கணவன் வேலைக்கு சென்றவுடன் மைத்துனருடன் உல்லாசம்.. 20 ஆயிரம் கொடுத்து புருஷனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி.

மைத்துனன் உடன் அண்ணி கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனை கூலிப்படையே வைத்து கொலை செய்துள்ள  சம்பவம் அரங்கேறி உள்ளது. மனைவி, இறந்தவரின் சகோதரனிடம்  விசாரணை நடத்தியதில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
 

wife Having sex with brother-in-law after husband goes to work. and husband murdered by wife
Author
Bihar, First Published Aug 3, 2022, 6:59 PM IST

மைத்துனன் உடன் அண்ணி கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனை கூலிப்படையே வைத்து கொலை செய்துள்ள  சம்பவம் அரங்கேறி உள்ளது. மனைவி, இறந்தவரின் சகோதரனிடம்  விசாரணை நடத்தியதில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

சில பெண்கள் பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்து வகையில் நடந்துகொள்கின்றனர். கணவன் உயிருடன் இருக்கும் போதே சில பெண்கள் மற்றவர்களுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு  ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிகின்றனர், அவர்கள் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு அது வெளி தெரியும் போது அவர்களின் மனம் மட்டும் அல்ல குடும்பத்தின் கௌரவம் காற்றில் பறக்க நேரிடுகிறது. இதுபோன்ற கள்ளக்காதல் விவகாரங்கள் சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. 

wife Having sex with brother-in-law after husband goes to work. and husband murdered by wife

இந்த வரிசையில் மனைவி தன் மைத்துனருடன் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் கூலிப்படை வைத்து கணவனை தீர்த்துக்கட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது. பீகார் மாநிலம்  கோபால்பூர் மாவட்டம் நவ் கச்சியா பகுதியை சேர்ந்தவர் பப்பு குப்தா, இவரது மனைவி பிரீத்தி குப்தா, இவர்களுடன் பப்பு குப்தாவின் சகோதரர் என ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரீத்தி குப்தா வுக்கும் அவரது மைத்துனருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்து வந்தது. கணவர்  வேலைக்கு சென்றவுடன் பிரீத்தி குப்தா மைத்துனன் உடன் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

இந்நிலையில் தங்கள் ரகசியம் கணவனுக்கு தெரிந்து விடுமோ என அஞ்சிய பிரீத்தி குப்தா கணவரை ஒரேடியாக தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்கு திட்டம் போட்டார் அவர் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து கூலிப்படையை நியமித்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலை முடிந்து கணவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது  இடையில் வழிமறித்த கூலிப்படை கும்பல் அவரைத்  கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தது. பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

wife Having sex with brother-in-law after husband goes to work. and husband murdered by wife

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இறந்த பப்பு குப்தாவின் மனைவி ப்ரீத்தி குப்தாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது இதனை அடுத்து இறந்த பப்பு குப்தாவின் சகோதரரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலுக்காக கணவனை தீர்த்து கட்டியதை பிரீத்தி குப்தா ஒப்புக்கொண்டார். அதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios