Asianet News TamilAsianet News Tamil

Rowdy Padappai Guna: என்கவுன்டர் பீதி.. வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் சரணடைந்த பிரபல ரவுடி படப்பை குணா..!

புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். அப்போது, காவல்துறை தரப்பில் என்கவுன்டர் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடைந்தால் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார்.

Rowdy Padappai Guna Surrender in Saidapet Court
Author
Chennai, First Published Jan 25, 2022, 12:37 PM IST

காவல்துறையால் தீவிரமாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க;- Rowdy Padappai Guna: சீட்டுக்கட்டாக சரியும் படப்பை குணாவின் சாம்ராஜ்ஜியம்.. வளைச்சு வளைச்சு ஆப்பு..!

Rowdy Padappai Guna Surrender in Saidapet Court

இந்நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ்.பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. படப்பை குணாவின் கூட்டாளிகள் அவருக்கு உதவி செய்த காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 

Rowdy Padappai Guna Surrender in Saidapet Court

இதனிடையே, மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் சுயேட்சையாக எனது கணவர் வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மூலம் மிரட்டல்கள் வருகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் தனது கணவர் சரணடைய தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுன்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, தனது கணவர் குணாவை என்கவுன்டர் செய்யக்கூடாது என அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். அப்போது, காவல்துறை தரப்பில் என்கவுன்டர் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடைந்தால் காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  பாஜகவில் இணைந்த கூலிப்படைத் தலைவன் படப்பை குணா மனைவி.. அடுத்த நாளே ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!

Rowdy Padappai Guna Surrender in Saidapet Court

இந்நிலையில், தான் படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்த வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு விரைந்து வந்து கொண்டிப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் அவருக்கு சொந்தமான 15 வாகனங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios