Asianet News TamilAsianet News Tamil

பழிக்கு பழி... பிரபல ரவுடி வெட்டிக் கொலை...!

சென்னையில் பிரபல ரவுடி மர்ம கும்பலால் நேற்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Rowdy murdered
Author
Tamil Nadu, First Published Mar 14, 2019, 10:28 AM IST

சென்னையில் பிரபல ரவுடி மர்ம கும்பலால் நேற்று இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை, ஓட்டேரி, சியாத் அம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் சத்தியா என்கிற செங்குட்டுவன் (39). பிரபல ரவுடியான இவருக்கு, கடந்த 8 மாதத்திற்கு முன்பு புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்தார். ஓட்டேரி பகுதியில் தங்கினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவர் கருதினார். Rowdy murdered

இதனால் அம்பத்தூர் திருவள்ளுவர் நகரில் உள்ள வீடு ஒன்றில் மனவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகில் இருக்கும் ஒயின்ஷாப் ஒன்றில், தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிந்தார். அப்போது 3 இருச்சகர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சத்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது அவருடன் அங்கிருந்தவர்கள் ஓட்டம் எடுத்தனர். இதனையடுத்த அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பித்தது. Rowdy murdered

இதனையடுத்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 மாதத்திற்கு முன் நடந்த கொலைக்கு, பழிக்கு தீர்க்கும் நடவடிக்கையாக, அந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து, அம்பத்துார் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios