Asianet News TamilAsianet News Tamil

இளம்பெண்களை வீடியோ எடுத்த காமூகன்கள் வழக்கில் திடீர் திருப்பம்... டிஜிபி அதிரடி..!

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுவதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Pollachi abuse case...CBCID change
Author
Tamil Nadu, First Published Mar 12, 2019, 2:11 PM IST

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுவதாக தமிழக டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளைஞர்கள் 4 பேர் கல்லூரி மாணவிகளிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாக பழகி வந்தனர். அவர்களை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இளம்பெண்களை துன்புறுத்தி ஆபாசமாக படமெடுத்து சித்ரவதை செய்தனர். இந்த வழக்கில் சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக இது போன்ற பல குற்றச்சமபவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது. Pollachi abuse case...CBCID change

இந்த வழக்கு குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கு தற்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை எழுப்பியுள்ளது. அரசியல் ரீதியாகவும் இந்த வழக்கு திசை மாறுகிறது எனவும் தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு அரசியல் கட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திருநாவுக்கரர் உள்ளிட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. Pollachi abuse case...CBCID change

இதனையடுத்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அவர்களின் விசாரணையில் இன்னும் பல்வேறு கட்ட தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios