Asianet News TamilAsianet News Tamil

ஃபர்ஸ்ட் நைட்டு காட்சிகளை வெளியிட்ட புதுமாப்பிள்ளை! பார்த்து விட்டு அதிர்ச்சியடைந்த பெண்வீட்டார்.!

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாததம் பிப்ரவரி 8ம் தேதி திருமணம் நடைபெற்றது.

new groom arrested for taking video of first night scenes
Author
First Published Mar 3, 2023, 9:52 AM IST

தனது முதலிரவு காட்சியை சமூகவலைளங்களில் வெளியிட்ட புதுமாப்பிள்ளையை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாததம் பிப்ரவரி 8ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வாலிபர் தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை அவருக்கு தெரியாமல் தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- அந்த இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை? பள்ளி தாளாளரை குண்டாசில் குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.!

new groom arrested for taking video of first night scenes

பின்னர், கொஞ்சம் கூச்ச நாச்சம் இல்லாமல் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை கண்டு பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மருமகனிடம் இதுதொடர்பாக கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பஞ்சாயத்தில் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். அப்படி இருந்த போதிலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் பெண்ணின் மாமியார் புகார் அளித்தார்.

இதையும் படிங்க;-  என்னோடு ஓயாமல் உல்லாசமாக இருந்துட்டு.. வேற ஒருத்திய கல்யாணம் பண்ணுவியா.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்.!

new groom arrested for taking video of first night scenes

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே முதலிரவு காட்சிகளை புதுமாப்பிள்ளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios