வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பசு மாடுகளை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரத்தினம் நகர் பகுதியில் வசித்து வருபவர் சோட்டாபாய் அவர் தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார் அவர் வீட்டின் அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த 5 மாடுகளில் 3 பசு மாடுகளை இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளனர்
இதையடுத்து மாடுகள் அலறியதால் வெளியில் வந்த அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்று பிடிக்க முற்படும்போது மர்ம நபர்கள் தப்பி உள்ளனர்


தற்போது 3 பசு மாடுகளும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது இதுகுறித்து பசு மாட்டின் உரிமையாளர் சோட்டா பாய் கொடுத்த புகாரின் பேரில் ஆம்பூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
