தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(25). கூலி தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றுக்கொண்டிருந்த போது  மாணிக்கம் கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். 

சிறுமியைக் கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனதத்தில் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்காசி மாவட்டம் ஊர்மேழலகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம்(25). கூலி தொழிலாளி. அதே ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றுக்கொண்டிருந்த போது மாணிக்கம் கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். 

இதையும் படிங்க;- நள்ளிரவில் முனங்கல் சத்தம்.. எட்டி பார்த்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இறுதியில் நடந்த பயங்கரம்..!

இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டிவிட்டு சென்றார். இதனையடுத்து, தனக்கு நேர்ந்த சம்பவத்தை தனது பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன்னை போலீசார் தேடுவதை அறிந்ததும் மாணிக்கம் தலைமறைவாகி விட்டார்.

இதையும் படிங்க;- மருதமலை பட பாணியில் 4வது கள்ளக்காதலுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த 3வது கள்ளக்காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்

உடனே அந்த காமக்கொடூரனை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த டிஎஸ்பி நாகசங்கர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனிடையே மாணிக்கம் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த புளியங்குடி காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டார்.