Asianet News TamilAsianet News Tamil

துப்பாக்கி முனையில் மாணவி கற்பழிப்பு... வீட்டு உரிமையாளர் அதிரடி கைது... பெங்களூரில் பரபரப்பு..!

குற்றம்சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் பெங்களூரில் மோசைக் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.

 

Bengaluru Businessman rapes tenant, 20, at gunpoint, in custody
Author
India, First Published May 23, 2022, 9:44 AM IST

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவியை, வீட்டு உரிமையாளர் துப்பாக்கி முனையில் கற்பழித்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளிச்சத்துக்கு வந்தது. சம்பவத்தில் வீட்டு உரிமையாளரான 46 வயது வியாபாரி கைது செய்யப்பட்டு இருக்கிறார். குற்றம்சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் பெங்களூரில் மோசைக் டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

மிரட்டல்:

46 வயதான வியாபாரி, மாணவி தங்கி இருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து, தான் வைத்து இருந்த துப்பாக்கியை கொண்டு மிரட்டி கற்பழித்து இருக்கிறார். முன்னதாக மாணவியின் நண்பர்கள் அவரை பார்க்க வீட்டிற்கு வருவதை வீட்டு உரிமையாளர் பல முறை எதிர்த்து இருக்கிறார். சமயங்களில் இவர் நண்பர்கள் முன்னிலையில், வீட்டு உரிமையாளர் மாணவியை திட்டி இருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வீட்டு உரிமையாளர் இடையே பலமுறை வாக்குவாதம் நடைபெற்று இருக்கிறது.

Bengaluru Businessman rapes tenant, 20, at gunpoint, in custody

ஒருமுறை வீட்டு உரிமையாளர், மாணவியின் ஆண் நண்பர் வீட்டிற்கு வந்த போது அவரின் இருசக்கர வாகனத்தை பூட்டி வைத்து, போலீசார் இவ்வாறு செய்ததாக கூறி, தனது காரில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்து இருக்கிறார். மேலும் ஆண் நண்பர் வீட்டிற்கு வருவதை மாணவியின் தந்தையிடம் கூறி விடுவேன் என வீட்டு உரிமையாளர் மிரட்டி இருக்கிறார். 

கற்பழிப்பு:

இதே போன்று பல நாட்கள் மாணவியை மிரட்டிய வீட்டு உரிமையாளர், சம்பவத்தன்று மாணவியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து, எனக்கு பின்புலம் இருக்கிறது. யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது என கூறி துப்பாக்கியை காட்டி மாணவியை மிரட்டி கற்பழித்து இருக்கிறார்.

குற்றம்சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர், மாணவி தன்மீது வேண்டுமென்றே பழி சுமத்தி இருக்கிறார். வீட்டில் நண்பர்களை அனுமதிக்கும் விவகாரத்தில் முரண் ஏற்பட்டதால், மாணவி இப்படி செய்து இருக்கிறார் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios