வெளியானது பார் நாகராஜின் அஜால் குஜால் வீடியோ...! இருந்தாலும் வழக்கு போடவில்லை...! ஆங்கில் ஆங்கிலா மிரட்டி எடுத்த கொடூரம்..!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளிவந்துள்ள இந்த வீடியோவில் பார் நாகராஜ் இருப்பது தெரியவந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் மேலும் 3 புதிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளிவந்துள்ள இந்த வீடியோவில் பார் நாகராஜ் இருப்பது தெரியவந்துள்ளது.
பாதிக்கபட்ட பெண்ணின் அண்ணன் கொடுத்த புகாரால் தான் திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் பிடிபட்டனர். இதனால் கோபம் அடைந்த பார் நாகராஜ், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கினர்.
இது தொடர்பாக, பார் நாகராஜ் கைது செய்யப்பட்ட அன்றே, பெரும் புள்ளிகள் தங்களது அதிகாரம் பயன்படுத்தி பார் நாகராஜை வெளியிட செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பார் நாகராஜ் நடத்தி வந்த மதுபான பாரை இன்று அடித்து நொறுங்கினார் மக்கள்.
இதற்கிடையில், இரண்டு பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கும் 3 வீடியோ வெளியாகி உள்ளது. தன்னுடையை ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை பார் நாகராஜ் மிரட்டும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதிமுக உறுப்பினராக இருந்த பார் நாகராஜை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், அவருக்கு பக்க பலமாக இருப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் இதுவரை பார் நாகராஜ் மீது வழக்கு பதியவில்லை.
பார் நாகராஜ் இரு பெண்களிடம் மிரட்டி தவறுதலாக இருந்த அந்த காட்சியை தங்களது நண்பர்கள் சபரிநாதன் மற்றும் சதீஷ் வீடியோவாக பதிவு செய்து உள்ளனர். இவர்கள் இருவரும் வீடியோ எடுத்துள்ளது அந்த பெண்களுக்கு தெரிய வில்லை. அதுமட்டுமல்லாமல், இந்த இரண்டு பெண்களும் முகநூல் மூலமாக நட்பாக பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகி உள்ள மூன்று வீடியோக்களில் ஒன்று சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் என்னென்ன கேவலங்கள் இருக்கின்றதோ..? ஆனால் இன்றும் வெளியில் தான் உள்ளார் பார் நாகராஜ். காரணம் அரசியல் பலமா..? அல்லது பண பலமா..? அல்லது அரசியல் பெரும் புள்ளிக்கே லிங்க்கா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.