Asianet News TamilAsianet News Tamil

மூன்று குழந்தைகளின் தாய் செய்யுற வேலையா இது.. 16 வயது சிறுவனை பலாத்காரம் செய்த 32 வயது பெண்

பக்கத்து வீட்டில் வசிக்கும் 32 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவன் படிக்கும் பள்ளிக்கு சென்று சிறுவனை அந்த பெண் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

15-year-old boy Rape..Woman Arrest in Kalyan
Author
First Published Jan 31, 2023, 1:36 PM IST

3 குழந்தைகளின் தாய் 16 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 33 வயதுடைய பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 16 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில், இந்த சிறுவன் நாசிக்கில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 32 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுவன் படிக்கும் பள்ளிக்கு சென்று சிறுவனை அந்த பெண் அடிக்கடி சந்தித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;- ரயில் நிலையத்தில் வருமான வரித்துறை பெண் அதிகாரியிடம் கண்ட இடத்தில் கை வைத்து இளைஞர் பாலியல் சீண்டல்..!

15-year-old boy Rape..Woman Arrest in Kalyan

பின்னர், சிறுவனிடம் சைநாக பேசி நாசிக்கில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்று மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து, சிறுவன் பள்ளிக்கு செல்வததாக கூறி நாசிக்கில் உள்ள அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;-  புதருக்குள் இழுத்து சென்று 92 வயது மூதாட்டி பலாத்காரம்.. காவெறி பிடித்த வாலிபரை தேடும் போலீஸ்..!

15-year-old boy Rape..Woman Arrest in Kalyan

பள்ளிக்கு செல்லாமல் இருப்பது சிறுவனின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து சிறுவனிடம் விசாரித்த போது நாசிக்கில் அப்பபெண்ணின் வீட்டிற்கு சென்று வந்ததும் உல்லாசமாக இருந்தையும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து மூன்று குழந்தைகளின் தாயை போலீசார் போச்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios