Yashika |கவர்ச்சி கன்னி யாஷிகாஆனந்தா இது? விபத்திற்கு பிறகு முதல்முறை வெளியே வந்த யாஷிகா!! சமீபத்திய வீடியோ
Yashika Aannand | 4 மாதங்களுக்கு பிறகு வெளியில் வந்த யாஷிகா ஆனந்த் கையில் குச்சியுடன் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
தமிழில் ‘கவலை வேண்டாம்’, ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான யாஷிகா ஆனந்த், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமானார். அதோடு தனது இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரவு விருந்தில் கலந்து கொண்ட பிறகு யாஷிகா தன்னுடைய நண்பர்களுடன் கிழக்கு கடற்கரைச் சாலையில் டாடா ஹேரியர் காரில் பயணம் சென்றுள்ளார். அப்போது யாஷிகா ஆனந்தின் கார், மாமல்லபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவனி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக குடி போதையில் வாகனம் ஒட்டியதாக யாஷிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த யாஷிகாவிற்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. கடந்த 4 மாதங்களாக சிகிச்சையில் இருந்த யாஷிகா தனது வீடியோவை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் அவர் எழுந்து நடக்க முயற்சிக்கு வீடியோவை பதிவிட்டு "இனியும் என்னை விரும்புவீர்களா?" என பரிதாபமாக கேள்வி கேட்டிருந்தார். இது யாஷிகாவின் ரசிகர்களை மேலும் துக்கத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற கடை திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக விபத்திற்கு பிறகு முதல் முறை யாஷிகா வெளியில் வந்துள்ளார். எப்போதும் கவர்ச்சி உடையில் கலக்கும் யாஷிகா தன கையில் ஸ்டிக்குடன் பரிதாபமாக நடந்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது.
"