கமலின் போராட்டத்தை வரவேற்கிறேன்; என் ஆதரவு அவருக்கு எப்போதும் உண்டு – குஷ்பூ அன்புக்கரம்…
ஊழலுக்கு எதிராக போராடும் கமலின் போராட்டத்தை வரவேகிறேன் என்றும் அவருக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் நடிகை குஷ்பு. இவர் நடிகர் கமல் அரசியலுக்கு வந்தால் அவரை ஆதரிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், கமல் அரசியலுக்கு வருவது குறித்து குஷ்பு தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், “ஊழலுக்கு எதிரான கமலின் செயல்பாடுகள் குறித்து பெருமையடைகிறேன். மாற்றம் நோக்கிய கமலின் போராட்டத்தை வரவேற்கிறேன். கடந்த இரண்டு மாதங்களில் கமலின் செயல்களால் அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. எனது நண்பர் கமலுக்கு எனது ஆதரவும் அன்பும் எப்போதும் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.