Asianet News TamilAsianet News Tamil

சூரியிடம் நில மோசடி புகார்..! விஷ்ணு விஷால் தந்தையின் அதிர்ச்சி செயல்..!

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது கடந்த சில வாரங்களுக்கு முன் நில மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

vishnu vishal father file the bail in chennai high court
Author
Chennai, First Published Oct 24, 2020, 11:50 AM IST

முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் காமெடி நடிகர் சூரி தனது முதல் பட ஹீரோவான விஷ்ணு விஷால் தந்தை மீது கடந்த சில வாரங்களுக்கு முன் நில மோசடி புகார் அளித்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. நகைச்சுவை நடிகர் சூரி சமீபத்தில் சென்னை காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். அதில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2.70 கோடி மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

vishnu vishal father file the bail in chennai high court

அதில் முன்னாள் தீயணைப்புத்துறை டி.ஜி.பியும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் மீது புகார் கூறப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரிக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாகவும். அதற்க்கு பதிலாக, சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாகவும் அதற்காக கூடுதலாக சூரி 2 கோடியே 70 லட்சம் தரவேண்டும் என்றும் விஷ்ணு விஷாலின் தந்தை கூறியதாக தெரிகிறது.

vishnu vishal father file the bail in chennai high court

சூரியிடம் இருந்து 2 கோடியே 70 லட்சம் பணத்தையும் பெற்று கொண்டு, கொடுக்க வேண்டிய சம்பள பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அடையார் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் விஷ்ணு விஷாலின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

vishnu vishal father file the bail in chennai high court

ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள விஷ்ணு விஷால் தனது தரப்பு விளக்கம் குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது என்றும், சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்பதையும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். 

vishnu vishal father file the bail in chennai high court

இந்த நிலையில், விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ்... தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதாக வாய்ப்பு உள்ளது என்பதால் தான், விஷ்ணு விஷாலின் தந்தை முன் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios