vinichakravarthy memories

பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி (72) சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' படம் மூலம் திரைக்கதை எழுதி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு 'வண்டி சக்கரம் ','கோயில் புறா','இமைகள்', 'பொண்ணுக்கேத்த புருஷன் ' ஆகிய படங்களுக்கு கதை-திரைக்கதை, வசனம் எழுதி துணை இயக்குனராகவும் பணி புரிந்தார். 

தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், படுகா,இந்தி,ஆங்கிலம் போன்ற மொழிகளில் 1003 படங்களில் நடித்துள்ளார். அவரது கடைசி படம் சீரடி சாய்பாபா. 

தனது இயல்பான நடிப்பால் மக்கள் அனைவரையும் கவர்ந்த இவர் நேற்று இரவு 7 மணி அளவில் காலமானதை அறிந்து திரையுலகினர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.அவரின் ஆத்மா சாந்தி அடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு நியூஸ் பாஸ்டின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.