மகனின் படப்பிடிப்பை வித்தியாசமான முறையில் நிறைவு செய்த விக்ரம்!
நடிகர் விக்ரமின் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா. இந்தப் படம் தெலுங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா. இந்தப் படம் தெலுங்கில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த படம் இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வர்மா' என்கிற பெயரில், எடுக்கப்பட்ட நிலையில், படத்தின் காட்சிகள் எதிர்பார்த்தது போல் வரவில்லை என தயாரிப்பு நிறுவனம், மீண்டும் இந்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து இயக்குனர் கிரீஷையா இயக்கத்தில், மீண்டும் 'ஆதித்திய வர்மா' என்ற பெயரில் இயக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் துருவே மீண்டும் கதாநாயகனாக நடித்து வந்தார். கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனித்தா சந்து நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. எப்போதும் போல் படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், கடைசியாக எடுக்கப்பட்ட காட்சி வெளியிட்டு, வித்தியாசமாக நிறைவு செய்துள்ளனர் படக்குழுவினர். கடைசி டேக் எடுத்த போது நடிகர் விக்ரமும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.