Asianet News TamilAsianet News Tamil

ஏன் திருமணம் நின்றது....??? உண்மையை வெளியிட்ட வைக்கம் விஜயலட்சுமி....

vaikomvijayalakshmi open talk about marriage drop
vaikomvijayalakshmi open-talk-about-marriage-drop
Author
First Published Mar 1, 2017, 4:43 PM IST


பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமி தன்னுடைய இனிமையான குரலால் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர். இவர் குரலில் உள்ள தனித்தன்மை கொண்டது. சமீபத்தில் இவர் பாடிய சொப்பன சுந்தரி பாடல் செம ஹிட் ஆனது.  

கேரளாவை பிறப்பிடமாக கொண்டாலும் தமிழில் தெள்ளத் தெளிவாக பாட கூடியவர் விஜயலட்சுமி.

இவருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து மார்ச் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது . ஆனால் ஒரு சில காரணங்களால் திருமணம் நின்று விட்டது என விஜயலட்சுமியின் தந்தை கூறினார்.

இது குறித்து தற்போது முதல் முறையாக மனம் திறந்துள்ள வைக்கம் விஜயலட்சுமி கூறுகையில்....தான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என  கூறி  அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் சந்தோஷ் தனக்கு  சினிமாவில் பாட  சான்ஸ் தொடர்ச்சியாக வராது.அதற்கு எந்த  உத்திரவாதமும் கிடையாது. எனவே அரசு இசை பள்ளிக்கூடத்தில் சேர்ந்து டீச்சர் ஆகிவிட்டால் கடைசி வரை சம்பளம், பென்ஷன் வரும் என கூறினார்.

இது என் மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நிச்சயதார்த்தத்துக்கு முன் பேசியபடி இல்லாமல் திடீரென மாற்றிப்பேசுகிறார். இசையை விட திருமணம் பெரியதாக தெரியவில்லை. எனவே இப்படியொரு முடிவை எடுத்துவிட்டேன் என கூறியிருகிறார் விஜயலட்சுமி

 

Follow Us:
Download App:
  • android
  • ios