Ulaga Nayagan Kamalhaasan : நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பிரபல நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் பெருந்தொகையை தற்பொழுது கொடுத்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணி பல ஆண்டுகளாகவே நிலுவையில் இருந்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான ஒரு கூட்டத்தில், கட்டிடத்தை விரைந்து கட்டி முடிக்க சுமார் 40 கோடி ரூபாய் வரை கடன் பெற பொதுச் செயலாளர் விஷால் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியானது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெருந்தொற்று காலகட்டத்தில் விலைவாசி 25 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ள நிலையில், வங்கியில் 40 கோடி ரூபாய் வரை கடன் வழங்க தகுதி உள்ள நிலையில் நடிகர் சங்கம் இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் வங்கியில் வாங்கி கட்டிடம் கட்டப்பட உள்ள நிலையில், அந்த கடனை கலை நிகழ்ச்சிகள் நடத்தி அடைக்கவும் திட்டமிடப்பட்டது. 

நானும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொண்டுள்ளேன்! புதுச்சேரி சிறுமிக்காக குரல் கொடுத்த நடிகை சோனா!

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற உச்ச நட்சத்திரங்களிடம் நிதி கேட்டு அடைக்கவும் நடிகர் சங்கம் திட்டமிட்டிருந்தது. இதற்கான பணியில் தொடர்ச்சியாக நடிகர் சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டு வந்தனர். 

இந்த சூழ்நிலையில் இன்று மார்ச் 9ம் தேதி சனிக்கிழமை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினராக தற்பொழுது செயல்பட்டு வரும் மூத்த நடிகரும், மநீம கட்சியின் தலைவருமான திரு. கமலஹாசன் தனது சொந்த நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் ஆகியோர் அதற்கான காசோலையை பெற்றுக்கொண்டனர். 

Sai Pallavi Party Photos: சரக்கு பார்ட்டியில்.. குத்தாட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி வைரலாகும் போட்டோஸ்!