Udhayanidhi Stalin : பிக்பாஸ்-ல ஜெயிச்சா பெரிய ஆளா... ஆரியின் செயலால் கடுப்பான உதயநிதி
Udhayanidhi Stalin : அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் பிக்பாஸ் ஆரி.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளரக கலந்துகொண்டவர் ஆரி. இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி டைட்டில் வின்னராகவும் வெற்றிவாகை சூடினார் ஆரி. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் ஆரிக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் அலேகா, பகவான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ஆரி, சேரன் இயக்கத்தில் உருவாகும் வெப் தொடர் ஒன்றிலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இதுதவிர அண்மையில் உதயநிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் ஆரி.
அருண்ராஜா காமராஜ் இயக்கியிருந்த இப்படம் இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். கடந்த மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னையில் நடந்தது.
அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய உதயநிதி, ஆரி குறித்து பேசுகையில், பிக்பாஸ் முடிந்ததும் ஆரியை எனது வேறொரு படத்தில் நடிக்க கேட்பதற்காக போன் போட்டேன். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை அழைத்தும் எடுக்காததால் ‘பிக்பாஸ்-ல ஜெயிச்சா அவ்ளோ பெரிய ஆள் ஆகிடுவாங்களானு’ கடுப்பாகிவிட்டேன். பின்னர் ஒரு நாள் அவரே போன் போட்டு பேசினார். அதற்குள் அந்த படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்துவிட்டதால் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்க ஓகே வானு கேட்டேன். உடனே சம்மதம் சொல்லி நடித்தார்” என கூறினார்.
இதையும் படியுங்கள்... Rolex சூர்யாவுக்கே டஃப் கொடுப்பார் போல... அஜித்தின் வில்லன் கெட்-அப் பார்த்து மெர்சலான ரசிகர்கள்