Asianet News TamilAsianet News Tamil

இனிமேல் இப்படி நடிக்க முடியாது - திரிஷாவின்  அதிரடி முடிவு......!!!

trisha take-decision-for-not-acting-horror-movies
Author
First Published Oct 21, 2016, 10:28 AM IST


விஜய் ,அஜித், கமல் என பல முன்னணி ஹீரோக்கள்ளுடனும் ஜோடி சேர்ந்து  விட்டார் திரிஷா, தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகா உள்ள கொடி படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், சமீப காலமாக பேய் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார், தொடர்த்து அரண்மனை படத்தில் பேய்யாக  நடித்தார் அந்த படத்தில் அவரது நடிப்பு எல்லாராலும் பாராட்டபட்டது.

அதே போல் நாயகி, தற்போது மோகினி போன்று தொடர்ந்து இதே போன்ற கதைகளிலேயே ஆர்வம் காட்டி வந்தார்.

trisha take-decision-for-not-acting-horror-movies

தற்போது இது பற்றி கூறியுள்ள திரிஷா...... தற்போது தான் நடிக்கும் படங்களை  மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருவதாகவும், எல்லா வேடங்களிலும் திறமையை வெளிப்படுத்தவே பேய் படங்களிலும் நடித்ததாக கூறியுள்ளார் .

ஆனால் தற்போது அதில் நிறைவு பெற்றிருப்பதால், இனி பேய் பேய் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மோகினி தான் கடைசி படம் என தெரிவித்துள்ளார்.

இனி முக்கியத்துவம்  உள்ள கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்றும், கதை பிடித்திருந்தால் அறிமுக இயக்குனர்கள் படத்திலும் நடிப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios