இப்படத்தினை 'புரியாத புதிர்' திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு என்பவர் இயக்கவிருக்கிறார்.
விரைவில் வெளிவரவிருக்கும் 'தீதும் நன்றும்' திரைப்படத்தினை தயாரித்த H.சார்லஸ் இம்மானுவேல் N. H.ஹரி சில்வர் ஸ்கிரின் சார்பில் தயாரிக்கும் இரண்டாவது படம் 'திரு.குரல்'. இப்படத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
இப்படத்தினை 'புரியாத புதிர்' திரைப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரபு என்பவர் இயக்கவிருக்கிறார். ஆகஸ்ட் 20 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெறி, நிமிர் படங்களை தொடர்ந்து இயக்குனர் மகேந்திரன் நடிக்கும் படம் திரு. குரல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - தியாகராஜன், ஸ்டண்ட் - ஹரி, நடனம் - ஸ்ரீ க்ரிஷ்.
