அம்மாடியோவ்!! தல அஜித்துக்கு இவ்வளவு கோபம் வருமா?... தீயாய் பரவும் வைரல் வீடியோ...!
அப்போது தல அஜித்தின் முகத்திற்கு நேராக ரசிகர் ஒருவர் செல்போனை கொண்டு சென்று செல்ஃபி எடுக்க முயன்றார்.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் ஜனநாயக கடமையாற்றினார். திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் 20 நிமிடத்திற்கு முன்னதாகவே தல அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வரிசையில் நின்று காத்திருந்தார்.
அஜித் வாக்குச்சாவடிக்கு வருவதை பார்த்த ஏராளமான ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொள்ள ஆரம்பித்தனர். காவல்துறையினர் கூட்டத்தை எல்லாம் கட்டுபடுத்தி அஜித் மற்றும் ஷாலினியை வாக்குப்பதிவு மையத்திற்குள் கொண்டு சென்றனர். அப்போது தல அஜித்தின் முகத்திற்கு நேராக ரசிகர் ஒருவர் செல்போனை கொண்டு சென்று செல்ஃபி எடுக்க முயன்றார்.
ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கித் தள்ளாடிய அஜித், வாக்குச் சாவடிக்குள் வந்தும் ரசிகர்கள் தன்னை சூழ்ந்து கொண்டதால் ஏற்பட்ட கோபம் காரணமாக செல்ஃபி எடுக்க முயன்றவரின் செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டார். அதன் பின்னர் தன்னைச் சுற்றியிருந்த ரசிகர்களையும் விலகிச் செல்லும் படி கையால் ஜாடை காண்பித்து விரட்டினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதன் பின்னர் அந்த ரசிகரை எச்சரித்த அஜித், சிறிது நேரம் கழித்து செல்போனை திரும்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ...