‘தமிழ் ராக்கர்ஸை ரசிகர்கள்தான் முடக்கவேண்டும்’ தயாரிப்பாளர்ஸ் சரண்டர்
‘இதோ ’சர்கார்’ படத்தோட ஹெச்.டி. பிரிண்ட் ரெடி’ என்று தமிழ் ராக்கர்ஸ் வழக்கம்போல டென்சன் பண்ண வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உஷ்ணமடைந்திருக்கிறது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இது சங்கத்தோட தன்மானப்பிரச்சினை என்று தயாரிப்பாளர்கள் பலரும் முண்டாசு தட்டி வருகின்றனர்.
‘இதோ ’சர்கார்’ படத்தோட ஹெச்.டி. பிரிண்ட் ரெடி’ என்று தமிழ் ராக்கர்ஸ் வழக்கம்போல டென்சன் பண்ண வழக்கத்தை விட சற்று அதிகமாகவே உஷ்ணமடைந்திருக்கிறது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இது சங்கத்தோட தன்மானப்பிரச்சினை என்று தயாரிப்பாளர்கள் பலரும் முண்டாசு தட்டி வருகின்றனர்.
இதை ஒட்டி இன்று மாலை சற்றுமுன்னதாக அவசர அறிக்கை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம் ஒவ்வொரு விநியோகஸ்தரும் விழிப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக தியேட்டர் உரிமையாளர்கள் தங்கள் தியேட்டரில் சந்தேகத்துக்குரிய நபர்கள் தென்பட்டால் உடனே போலீஸில் புகார் தெரிவிக்கவேண்டும். இன்யும் தவறு நிகழாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது.
இன்னொரு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் இதையும் மீறி படத்தை இணையத்தில் வெளியிடும் பட்சத்தில் அவற்றை முடக்கும் குழுவினரின் எண்ணிக்கை இம்முறை பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த முன்னணி தயாரிப்பாளர் ஒருவர், ‘’ இந்த முயற்சிகளின் ரிசல்ட் மேல் எனக்கு பெரிய நம்பிக்கையில்லை. என்றைக்கு ரசிகர்கள் அந்த இணையதளத்தில் படம் பார்ப்பதை தவிர்க்கிறார்களோ அப்போது அவர்களாகவே முடங்கிவிடுவார்கள்’ என்கிறார்.