Asianet News TamilAsianet News Tamil

Actor Jayakumar :கஷ்டப்பட்டு 40 வயதில் ஹீரோவான நடிகர்.. முதல் படம் ரிலீசாகும் முன்பே விபத்தில் பலியான பரிதாபம்

Actor Jayakumar : சினிமாவில் ஹீரோவாக நடித்து சாதிக்க வேண்டும் என்கிற பெருங் கனவோடு இருந்த நடிகர் ஜெயக்குமார், அவர் நடித்த முதல் படம் ரிலீசாகும் முன்பே உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

Tamil cinema sengundram movie Actor Jayakumar died in road accident
Author
Tamil Nadu, First Published Mar 30, 2022, 12:18 PM IST

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். 40 வயதான இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கஷ்டப்பட்டு ஹீரோ ஆகியுள்ளார். இவர் நடிப்பில் செங்குன்றம் என்கிற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஷூட்டிங்கை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஜெயக்குமார். அப்போது செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அவர் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்தில் சிக்கினார்.

Tamil cinema sengundram movie Actor Jayakumar died in road accident

இதில் இருவருமே படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் பாடியநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நடிகர் ஜெயக்குமார் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நடிகர் ஜெயக்குமார் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சினிமாவில் ஹீரோவாக நடித்து சாதிக்க வேண்டும் என்கிற பெருங் கனவோடு இருந்த நடிகர் ஜெயக்குமார், அவர் நடித்த முதல் படம் ரிலீசாகும் முன்பே உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இதையும் படியுங்கள்... samantha :இன்ஸ்டாகிராம் மூலம் மட்டும் நடிகை சமந்தாவுக்கு இவ்வளவு வருமானமா.. ஒரு போஸ்ட் போட்டாலே ஓஹோனு வாழலாமே!

Follow Us:
Download App:
  • android
  • ios