sri reddy gave complaints against varagi
சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி வாராகி மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார்.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என நடிகர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீ ரெட்டி தொடர் குற்றசாட்டை முன் வைத்து உள்ளார்.
தெலுங்கு திரை உலகில் நடிகர் நானி முதற்கொண்டு பல்வேறு முன்னணி நடிகர்கள் மீது, பாலியல் புகார் தெரிவித்து வந்தார்.
பின்னர் கோலிவுட் பக்கம் திரும்பிய ஸ்ரீ ரெட்டி, இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், நடன இயக்குனர் லாரன்ஸ், சுந்தர் சி, மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் என....இவர்கள் மீது பாலியல் குற்றசாட்டை சுமத்தி உள்ளார்
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்த்திரையுலக பிரபலங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், அவர் மீது விபச்சார தடுப்புப் பிரிவின்கீழ் வழக்கு தொடர்ந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாராகி தனது மனுவில்கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ ரெட்டி, தனது பேஸ்புக் பக்கத்தில் வராகி எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். மேலும், கமிஷனர் அலுவலகம் சென்ற ஸ்ரீ ரெட்டி வராகி மீது புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரை உலகில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் கால் பதிய வேண்டும் என்ற முயற்சியில், ஸ்ரீ ரெட்டி களத்தில் இறங்கி உள்ளார்.

தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக, தவறாக மட்டுமே பயன்படுத்திய விவகாரம் இனி நடைபெற கூடாது என்றும், தனக்கு நடிக்க வாய்ப்பு மட்டுமே கிடைக்க வேண்டும்....திறமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என ஸ்ரீ ரெட்டி குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், வராகி மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து உள்ளார்
