Asianet News TamilAsianet News Tamil

பிரபல பாடகி கொடூரமான முறையில் கத்தரிக்கோலால் குத்தி கொலை...!

singer priyani jasingka murder in srilanka
singer priyani jasingka murder in srilanka
Author
First Published Jul 9, 2018, 2:54 PM IST


சிங்கள திரைப்படங்களில் பல பாடல்களை பாடி, தன்னுடைய இனிமையான குரலால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் பிரபல பாடகி பிரியானி ஜெயசிங்கா. 

இந்நிலையில் இவரை இவருடைய கணவரே கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. singer priyani jasingka murder in srilanka

கொழும்பில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ள களுத்துறை மாவட்டம் , பனதுர நகரில் உள்ள இவருடைய வீட்டில் தான் பாடகி பிரியானி, ஒரு ஜோடி கத்தரிக்கோல் கொண்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த தகவலை காவலர் ஒருவரும் உறுதி செய்துள்ளார். 

அதேபோல் பல பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரியானியின் கணவர் போலிசாரால் தேடப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. singer priyani jasingka murder in srilanka

53 வயதாகும் பிரியானி ஜெசிங்காவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரின் கொலை சம்பவம் தொடர்பாக, இவரின் கணவர் சந்தேகத்தின் பெயரில் தேடப்பட்டு வந்தாலும், தொடர்ந்து இவருடைய மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவும் விசாரணைக்கு பின்பே உண்மை நிலவரம் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios