'குக் வித் கோமாளி' கனி கையால் செய்த காரக்கொழம்பு சாப்பிட வீட்டுக்கே சென்ற சிம்பு..!
சமீபத்தில் நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அறிவிக்கப்பட்டனர் கனி. இந்த நிகழ்ச்சியின் பைனலில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு விருதுகளை வழங்கினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 'குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான அறிவிக்கப்பட்டனர் கனி. இந்த நிகழ்ச்சியின் பைனலில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, குக்குகள் முதல் கோமாளி வரை அனைவருக்கு விருதுகளை வழங்கினார்.
நார்த் இந்தியன் உணவுகளை விட, தென்னிந்திய சமையல்களில் சிறந்து விளங்கியவர் கனி. குறிப்பாக, வாழை தண்டை கூட போட்டு காரக்குழம்பு வைத்து அசத்தியுள்ளார். எனவே இவரை அனைவருமே காரை குழன்பு கனி என செல்லமாக அழைப்பது உண்டு. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூட காரை குழம்பு கனி என்று பைனலில் போது, கிண்டல் செய்தார்.
இந்த நிலையில் சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கனி. கனியின் கணவர் இயக்குனர் திரு தனது டுவிட்டரில் ’சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி என்றும் அவர்களது வருகை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்றும் கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் கனியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு, மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் பார்த்து, ரசிகர்கள்... சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.