RC15 : ஷூட்டிங் முடியும் முன்பே சூடுபிடித்த ஷங்கர் பட பிசினஸ்.... அதுக்குள்ள 200 கோடியா? - மிரண்டுபோன டோலிவுட்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் ஹீரோக்களை வைத்தே இதுவரை படம் எடுத்துக்கொண்டிருந்த ஷங்கர், தற்போது முதல் முறையாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து படம் இயக்கம் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த படத்தின் ஒன் லைன் கதையை இயக்குனர் கார்த்தி சுப்புராஜிடம் இருந்து பெற்றுள்ளார்.
இது தன்னுடைய கதை என, கார்த்தி சுப்புராஜின் துணை இயக்குனர் ஒருவர் கூறியதால் பரபரப்பும் ஏற்பட்டு பின்னர் அடங்கியது. இதையடுத்து ஒருவழியாக அனைத்து பிரச்னையும் முடிவுக்கு வந்து, கடந்த செப்டம்பர் மாதம் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு, பூனேவில் துவங்கியது. தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் நடிகர் ராம் சரணுக்கு ஜோடியாக இந்த படத்தில், பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஜெயராம், நவீன் சந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்எஸ் தமன் இசையமைப்பில், திரு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு இதுவரை பெயரே வைக்காத நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் ரூ.200 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் தனது முதல் படத்திலேயே மாஸ் காட்டும் இயக்குனர் ஷங்கரை பார்த்து டோலிவுட்டே மிரண்டுபோய் உள்ளதாம்.