சன்னல் கம்பியில் பிணமாக கேரள நடிகை...போலீசில் வசமாக சிக்கிய கணவர்
கேரளாவில் பிரபல மாடலாக இருந்து வரும் ஷஹானா ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மலையாள மாடலும் நடிகையுமான சஹானா வியாழக்கிழமை இரவு வீட்டு சன்னல் கம்பியில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்தனர். அவரது மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவரது கணவர் சஜ்ஜத்தை போலீசார் காவலில் எடுத்துள்ளனர்.
வியாழக்கிழமை தனது 22வது பிறந்தநாளைக் கொண்டாடிய சஹானா, அதே இரவில் கோழிக்கோட்டில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக புகார் அளித்த நடிகையின் குடும்பத்தினர் அவர் தனது கணவரால் குடும்ப வன்முறையை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். சஹானா கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சஜ்ஜத்தை திருமணம் செய்த வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
சஹானா மரணம் குறித்து பேசிய அவரது தாயார்,'“என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டாள், அவள் கொலை செய்யப்பட்டாள். கணவர் அடிப்பதாகவும், சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை என்றும் என்னிடம் புகார் அளித்தாகவும், தன மகள் சித்திரவதை செய்யப்பட்டாள். அவள் கொலை செய்யப்பட்டாள். போலீசார் விசாரணை நடத்தி எனது மகளுக்கு நீதி வழங்க வேண்டும்” என்று சஹானாவின் தாய் மாத்ருபூமி செய்தியிடம் கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் நடிகை மரணம் குறித்து தெரிவித்த விசாரணை அதிகாரி,'அவர் நகைக் கடைகளின் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். மேலும் ஒரு திரைப்படத்திலும் நடித்தார். "சஜ்ஜாத் முன்பு கத்தாரில் பணிபுரிந்தார், ஆனால் இங்கு வேலையில்லாமல் இருக்கிறார். சமீபத்தில் சஹானா ஒரு படத்தில் நடித்துள்ளார்.. படத்தில் நடித்ததற்காக சஹானா பெற்ற பணம் தொடர்பாக கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது,"என தெரிவித்தார்.