மகளுடன் இருக்கும் புகைப்படத்தை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தந்தை மகள் இருவரும் மடிக்கணினியில் வொர்க் செய்து கொண்டிருக்கும் அழகிய காட்சி இடம் பெற்றுள்ளது.
இயக்குனர் செல்வராகவன், அவருடைய சகோதரர் தனுஷை வைத்து, கடந்த 2002 ஆம் ஆண்டு 'துள்ளுவதோ இளமை' என்கிற படத்தை இயக்கினார். இளவட்டத்தை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே, படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷை வைத்து இயக்கிய 'காதல் கொண்டேன்' திரைப்படம் தனுஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சோனியா அகர்வாலுக்கும் செல்வராகவனுக்கு காதலும் மலர்ந்தது.
பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் அந்த வாழ்க்கை 4 வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இருவரும் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

செல்வராகவன் இயக்கிய “மயக்கம் என்ன” படத்தில், துணை இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவருக்கும், இவருக்கும் இடையே காதல் துளிர் விட்டு அது திருமணத்திலும் முடிந்தது.
2011 இல் திருமணம் செய்துகொண்ட தம்பதியருக்கு 20 ஜனவரி 2012 அன்று பிறந்த மகள் லீலாவதி மற்றும் ஒரு மகன் ஓம்கர் 7 அக்டோபர் 2013 இல் பிறந்தனர். சமீபத்தில் தான் இவர்களுக்கு மூன்றாவது ஆண் குழந்தை பிறந்தது. அவ்வபோது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்கள்.
தனுஷை வைத்து நானே வருவேன் என்னும் படத்தை இயக்கி வரும் செல்வராகவன்.. அவருக்கு என்ன பிரச்சனை என கேட்க வைக்கும் அளவிற்கு சோகமான பதிவுகளை செய்து.. காரணம் புரியாத ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தந்தை மகள் இருவரும் மடிக்கணினியில் வொர்க் செய்து கொண்டிருக்கும் அழகிய காட்சி இடம் பெற்றுள்ளது.

