கணவர் ஆர்யாவுடன் செம்ம மார்டனாக நைட் அவுட் சென்ற சாயிஷா! அவரே வெளியிட்ட புகைப்படம்!
நடிகை சாயிஷா திருமணத்தை தொடர்ந்தும், சமந்தா பாணியை பின்பற்றி வருகிறார். குறிப்பாக நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிப்பது போலவே, சாயிஷாவும் தற்போது கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து, டெடி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை சாயிஷா திருமணத்தை தொடர்ந்தும், சமந்தா பாணியை பின்பற்றி வருகிறார். குறிப்பாக நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடிப்பது போலவே, சாயிஷாவும் தற்போது கணவர் ஆர்யாவுடன் சேர்ந்து, டெடி என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக இருவரும் வெளிநாடு சென்றுள்ளார். அப்போது கணவர் ஆர்யாவுடன், நைட் அவுட் சென்ற புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சாயிஷா.
இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவான 'கஜினிகாந்த்' படத்தில் நடிகை சாயிஷாவுடன், இணைந்து நடித்தார் ஆர்யா. அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதல் தற்போது திருமணத்தில் முடிவடைந்துள்ளது.
திருமணத்துக்கு முன்னரே இவர்கள், இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கியத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான், சாயிஷா கதாநாயகியாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும், இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் 'டெடி' படத்தில் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் சென்றுள்ள இருவரும் டின்னருக்காக நைட் அவுட் சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்பததை சாயிஷா வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் இதோ: