சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்', ஓடி ஓடி உழைக்கணும், சக்கை போடு போடு ராஜா' ஆகிய படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கின்றார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் சந்தானம் நடிக்கின்றார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
தற்போது செல்வராகவன் மற்றும் சந்தானம் இணையும் படத்திற்கு 'மன்னவன் வந்தானடி' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதே டைட்டிலில் கடந்த 1975ஆம் ஆண்டு சிவாஜிகணேசன், மஞ்சுளா நடிப்பில் வெளிவந்த ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல நடிகை டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அவர் தான் நாயகியாக நடிப்பது உறுதி ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செல்வராகவன் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த பணிகள் முடிந்ததும் அவர் 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
