Asianet News TamilAsianet News Tamil

போதை பொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆன ரகுல் ப்ரீத் சிங்!!

போதை பொருள் வழக்கு விசாரணைக்காக ஹைதராபாத் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நடிகை சார்மி கவுர் ஆஜரான நிலையில், இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகியுள்ளார்.
 

Rakul Preet Singh to appear in drug case
Author
Chennai, First Published Sep 3, 2021, 10:33 AM IST

போதை பொருள் வழக்கு விசாரணைக்காக ஹைதராபாத் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நடிகை சார்மி கவுர் ஆஜரான நிலையில், இன்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகியுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகுல் பிரீத் சிங் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். போதை மருந்து விவகாரத்தில் பல தெலுங்கு திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளுக்கு தொடர்புள்ளதாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதலே, இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி கவுர், ரகுல் ப்ரீத் சிங், ராணா, நவ்தீப் ரவிதேஜா உள்பட 12 பிரபலங்கள் சாட்சியாக மட்டுமே சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Rakul Preet Singh to appear in drug case

போதை மருந்து விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட, கெல்வினிடம் கலால் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவரது செல்போனில் இருந்து தெலுங்கு திரைப்பட நடிகர், நடிகைகள், சிலரது எண்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில்  இவர்களுக்கெல்லாம் போதை மருந்து சப்ளை செய்தாரா? என்பது குறித்து பல்வேறு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

Rakul Preet Singh to appear in drug case

தற்போது இந்த வழக்கில் பண மோசடியும் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருகிறார்கள்.  இது தொடர்பாக ஏற்கனவே பிரபல இயக்குனர் பூரி ஜெகநாதன், சார்மி  ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios