Asianet News TamilAsianet News Tamil

பொய் சொன்னாரா கஸ்தூரி...? ரஜினி தரப்பில் இருந்து வந்த சரியான பதிலால் ஏற்பட்ட குழப்பம்...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டும் அமெரிக்க செல்ல எப்படி அனுமதி கிடைத்தது என்று, சந்தேக தொனியில் கேள்வி எழுப்பி இருந்த கஸ்தூரி திடீர் என நேற்று, அதற்கான விடை கிடைத்து விட்டதாக அவரே ட்விட்டரில் பதிலளித்துள்ளார். ஆனால் தற்போது ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் அதிர்ச்சி உண்மை ஒன்றை வெளியிட மீண்டும் இந்த விஷயம் பேசுபொருளாக மாறியுள்ளது.
 

rajinikanth pro riaz clarification for kasthuri yesterday tiwt
Author
Chennai, First Published Jun 30, 2021, 4:56 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மட்டும் அமெரிக்க செல்ல எப்படி அனுமதி கிடைத்தது என்று, சந்தேக தொனியில் கேள்வி எழுப்பி இருந்த கஸ்தூரி திடீர் என நேற்று, அதற்கான விடை கிடைத்து விட்டதாக அவரே ட்விட்டரில் பதிலளித்துள்ளார். ஆனால் தற்போது ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் அதிர்ச்சி உண்மை ஒன்றை வெளியிட மீண்டும் இந்த விஷயம் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொற்று, அதிகரித்து கொண்டே சென்றதால், இந்தியாவில் இருந்து அமெரிக்கா, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வர அந்நாடுகள்... கடந்த மே மாதம் முதலே தடை விதித்தது.  இதனால் அமெரிக்காவிற்கு செல்ல இருந்த பலரால் இங்கிருந்து செல்லமுடியவில்லை. இந்த நிலையில் ரஜினிக்கு மட்டும் எப்படி அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது...  என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

rajinikanth pro riaz clarification for kasthuri yesterday tiwt

மேலும் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகியதற்கும், அமெரிக்கா சென்றதற்கு கூட முடிச்சி போட்டு சில சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தார். அதே நேரத்தில் இதுபோன்ற சந்தேகங்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும்,  மத்திய அரசிடமிருந்து மருத்துவ விலக்கு பெற்று அமெரிக்கா செல்லும் அளவுக்கு அவரது உடலுக்கு அப்படி என்ன நேர்ந்தது என்றும், இந்தியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு அவரது உடலில் என்ன பிரச்சனை என்ற கேள்வியையும் நடிகை கஸ்தூரி முன்வைத்தார்.

rajinikanth pro riaz clarification for kasthuri yesterday tiwt

இவரது கேள்வி ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மட்டும் இன்றி, அனைத்து தரப்பினர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர் முன் வைத்த இதுபோன்ற கேள்விகளுக்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்டதாக அவரே தற்போது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கஸ்தூரி போட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது.... "அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி  ! நாரதர் கலகம்  நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி-  நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம் ! " என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டது.

rajinikanth pro riaz clarification for kasthuri yesterday tiwt

இவரது இந்த பதிவை தொடர்ந்து சற்று முன்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ்... கஸ்தூரி நேற்று கொடுத்த விளக்கத்தை டேக் செய்து, "தலைவரோ ,தலைவர் குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை , எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம். என்று கூறி கஸ்தூரி சொல்வது பொய் என்பது போல் கூறியுள்ளார். எனவே மீண்டும் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது. இவரது இந்த பதிவிற்கு கஸ்தூரி எவ்விதமான பதில் அளிப்பார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
 

 

Follow Us:
Download App:
  • android
  • ios