Asianet News TamilAsianet News Tamil

50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி..! 'கர்ணன்' படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகவுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், 'கர்ணன்' படம் சொன்னபடி ரிலீஸாகுமா என ரசிகர்கள் மனதில் சந்தேகம் இருந்த நிலையில், 'கர்ணன்' படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
 

producer kalaipuli dhanu confirm to release karnan movie
Author
Chennai, First Published Apr 8, 2021, 4:45 PM IST

நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி, அதாவது நாளை வெளியாகவுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில், 'கர்ணன்' படம் சொன்னபடி ரிலீஸாகுமா என ரசிகர்கள் மனதில் சந்தேகம் இருந்த நிலையில், 'கர்ணன்' படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் 'கர்ணன்'.  ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் விதமாக, இதுவரை 'கண்டா வரச்சொல்லுடா', 'பண்டாரத்தி புராணம்', மற்றும் 'திரௌபதி முத்தம்' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

producer kalaipuli dhanu confirm to release karnan movie

இதை தொடர்ந்து வெளியான இந்த படத்தின், டீசர் ஒரே நாளில் மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

கர்ணன் பட டீசர்... உழைக்கும் வர்கத்தின் கதை என்பது இந்த படத்தை டீசரில் இருந்த தெரிந்தது . டீசரின் துவக்கத்திலேயே, பருந்து ஒன்று கோழி குஞ்சுகளை தூக்கி செல்வது போல் காட்டப்படுகிறது. இதுவே இந்த படம் குறித்த பல யுகங்களை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. கண்ணீர் மல்க அமர்ந்திருக்கும் மக்கள்... தனுஷ் குதிரையில் கையில் வாலுடன் கொடுக்கும் என்ட்ரி வேற லெவலில் இருந்தது. மக்களும் ஒருத்தனையும் விடாத கர்ணா... அடிச்சி துரத்து என கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

producer kalaipuli dhanu confirm to release karnan movie

இந்நிலையில் இந்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பிரச்சனை அதிகரித்து வருவதால், தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இதுவரை 100  சதவீத பார்வையாளர்களுடன் இயங்கி வந்த, திரையரங்குகளில், இனி 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

producer kalaipuli dhanu confirm to release karnan movie

எனவே கர்ணன் திரைப்படம் சொன்னது போல் நாளை வெளியாகுமா என்கிற ஒரு சந்தேகம் ரசிகர்கள் மனதியில் இருந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு,  ‘கர்ணன்’ திரைப்படம் ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை திரையரங்குகளில் வெளியாகும். அரசு அறிவித்துள்ள 50 சதவீத இருக்கைகள் அனுமதி என்ற கட்டுப்பாட்டில் ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாகும். அதே போல் அரசு அறிவித்த அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும். ரசிகர்கள் அனைவருக்கும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவெனில் அனைவரும் பாதுகாப்புடன் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து ‘கர்ணன்’ திரைப்படத்தை ரசிக்க வாருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios