Asianet News TamilAsianet News Tamil

"பாதுகாப்பாக இருங்கள்... அன்பாக இருங்கள்..." இதுக்கு தான் இவ்வளவு பில்டப் செய்தாரா பார்வதி?

பிரபல மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானவர்.

parvathy releave the social media
Author
Chennai, First Published Aug 16, 2018, 1:27 PM IST

பிரபல மலையாள நடிகையான பார்வதி, தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானவர்.

இவர் ட்விட்டர், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிர ஆர்வம் காட்டி வருபவர். சினிமாவை பற்றிய கருத்துக்களை பதிவிடுவதை விட, பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் பற்றியும் பேசி வந்தார். மேலும் மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பிலும் பார்வதி முக்கிய பொறுப்பில் இருக்கிறார். குறிப்பாக பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடியாது என போர்க்கொடி தூக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க சென்று வந்த இவர் சில காலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி கூறியுள்ளது... "இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களுக்கும் எனது கருத்துக்களுக்கு பதில் சொல்பவர்களுக்கும் நன்றி. சமூக வலைத்தலத்தில் தொடர்ந்து என்னை நீங்கள் ஆதரித்து வருவது மகிழ்சியாக உள்ள்ளது. சமூக வலைதளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. சிறிது காலம் சமூக வலைத்தளத்துக்கு வரமாட்டேன். எல்லோரும் "பாதுகாப்பாக இருங்கள்... அன்பாக இருங்கள்..." என்று கூறியுள்ளார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
 

Follow Us:
Download App:
  • android
  • ios