Asianet News TamilAsianet News Tamil

புதிய செல்போன் வாங்கிக் கொடுத்த நடிகர் சிவகுமார்… நெட்டிசன்கள் இல்லைன்னா இது நடந்திருக்குமா ?

செல்பி எடுக்க வந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு கடும் கண்டனத்துக்கு ஆளான நடிகர் சிவகுமார் தற்போது  அந்த  ரசிகருக்கு புது செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தால்தான் புதிய செல் போன் கிடைத்தாகவும் , அவர்களுக்கு நன்றி எனவும்  அந்த ரசிகர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

new cell phone for sivakumar fan
Author
Madurai, First Published Nov 2, 2018, 6:51 AM IST

மதுரையில் \ தனியார் கருத்தரிப்பு மையத்தை நடிகர் சிவகுமார் மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். ரிப்பன் கட் பண்ணுவதற்கு சிவகுமார் அருகில் வரும்போது, ஓரமாக நின்ற ரசிகர் ஒருவர் தனது செல்போனை உயர்த்தி செல்பி எடுக்கும் ஆவலில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராத நேரத்தில் சிவகுமார் திடீரென செல்பி எடுக்கும் இளைஞர் கையிலிருந்த செல்போனைத் தட்டிவிட்டார். அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். இந்த வீடியோ பதிவு பெரும் வைரலாகப் பரவியது. இதை வைத்து மீம்ஸ் எல்லாம் உருவாக்கி வெளியிட்டார்கள். வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இளைஞர் செல்போனைத் தட்டி விட்டது ஏன் என்று சிவகுமார் விளக்கம் அளித்தார்.

new cell phone for sivakumar fan

ஆனாலும்  அந்த விளக்த்தை ஏற்காத நெட்சன்கள் சிவகுமாருக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததோடு , அவருக்கு புது செல்போன் வாங்கித் தர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் செல்போனை தட்டி விட்ட சம்பவத்துக்கு சிவகுமார் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது  செயலுக்காக வருத்தம் தெரிவித்திருந்தார். ராகுல் என்ற அந்த ரசிகரும், அய்யோ என செல்போன் போச்சே என புலம்பிக் கொண்டிருந்தார்

new cell phone for sivakumar fan

இந்நிலையில் நடிகர் சிவகுமார் தான் தட்டிவிட்ட செல்போனுக்கு பதிலாக 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள  புதிய செல்போன் ஒன்றை  வாங்கி ராகுலுக்கு கொடுத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட ராகுல், தனக்கு நியாயம் கிடைக்கச் செய்த நெட்டிசன்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருக்காவிட்டால இது சாத்தியமில்லை என்றும் ராகுல் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios