சிறுவனை பிடித்து மடியில் வைத்து நடிகை செய்த காரியம்..!! சாலையில் நிகழ்ந்த சம்பவம்..!!
தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய நபர் என அச்சிறுவனை குறிப்பிட்டு அவர் அப்புகைப்படங்களின் கீழ் கமெண்ட் செய்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது .
பிரபல நடிகை சாலையில் பலூன் விற்பனைசெய்துகொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கொஞ்சியபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது . அரசியல்வாதியாக இருந்து நடிகையானவர் நுஸ்ரத் ஜஹான் , இவர் தன் வார இறுதியில் தனது காரில் ஹாயாக சுற்றி வந்த போது , சாலையில் பலூன் விட்டுக்கொண்டிருந்த சிறுவனை தூக்கி கொஞ்சி உள்ளார் .
அதற்கான புகைப்படங்களை திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான நுஸ்ரத் ஜஹான் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் , அவருக்கு இணையதள வாசிகள் மிகுந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் பதிவு செய்து வருகின்றனர் . இப் புகைப்படங்கள் பலரின் மனதில் இடம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர் . இந்த புகைப்படத்தில் நுஸ்ரத் ஜஹான் ஒன்றரை வயது சிறுவனை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார் . இந்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாகிராமில் இதுவரை சுமார் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் கொடுத்துள்ளனர் . அப் புகைப்படத்தில் தனது வார இறுதி நாட்களை சிறப்பாக ஆக்கிய நபர் என அச்சிறுவனை குறிப்பிட்டு அவர் அப்புகைப்படங்களின் கீழ் கமெண்ட் செய்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது .
அதாவது அந்த புகைப்படத்தில் குழந்தை ஒன்றை மடியில் வைத்து கொஞ்சியபடி உள்ளார் நுஸ்ரத் ஜஹான். அவரது மடியில் உள்ள இந்த குழந்தை சாலையில் பலூன்விற்றுக் கொண்டிருந்ததாகவும் அவன் விற்ற பலூன்களை விட அவன் வண்ணமயமாக உள்ளதாகவும் நடிகை நுஸ்ரத் ஜஹான் தெரிவித்துள்ளார் . வைரலாகி வரும் அந்த புகைப்படங்களை காண்போர் அனைவரும் நுஸ்ரத் ஜஹானை மனம் திறந்து பாராட்டி வருகின்றனர் .